மேட்டுப்பாளையம், அக்.28- கொரோனா பரவலால் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய கொண்டு வரப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தனியார் பள்ளி களும் இணைய விருப்பம் தெரி வித்து வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள தென்பொன் முடி அரசு மேல்நிலைப்பள்ளியில் டபிள்யூடபிள்யூஎப் இந்தியாவின் (WWF) “மிஷன் இயற்கை” என்ற சுற்று சூழல் கல்வி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று “மிஷன் இயற்கை” என்ற சுற்று சூழல் கல்வி திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசு கையில், “மாணவ பருவத்திலேயே இயற்கையினை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்த அறிவை வளர்த்து கொள் ளவும், இயற்கையுடன் இணைந்து வாழ்வதன் அவசியம் குறித்தும் கற்று கொடுக்கும் ஒரு மாணவர் இயக்க மாக “மிஷன் இயற்கை” துவக்கப் பட்டுள்ளது. இயற்கையை கெடுக் காமல் இருப்பதே இயற்கையை பாதுகாப்பதற்கு சமம்” என்றார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கொரோனா பரவ லால் பள்ளி மாணவ மாணவியருக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி கட்ட கொண்டு வரப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் ஒன் றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 34 லட்சம் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு விடுபட்ட அடிப்படை கல்வியை கற்று தரு வதில் முனைப்பு காட்டி வருகிறோம். தற்போது இந்த திட்டத்தில் இணைய அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.