கோவை, ஜூலை 24- டாஸ்மாக் மதுக்கடைகளை மூடு வதாக ஒருபுறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் எப்எல்-2 என்ற பெயரில் தனியார் மதுக்கடைகள் அதிக ரிப்பை ஊக்குவிக்கும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் நட வடிக்கைகளை கண்டித்து கோவை யில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை ஏற் றார். இதில், சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சம்மேளன பொதுச் செயலா ளர் திருச்செல்வன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். இதில், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.ஜான் அந்தோணிராஜ், பொருளாளர் ராம கிருஷ்ணன், மாநில துணைச் செய லாளர் செந்தல் பிரபு, மாநில குழு உறுப்பினர்கள் தங்கராஜ், சரவணன் உள்ளிட்ட திரளான டாஸ்மாக் ஊழி யர்கள் பங்கேற்றனர். முன்னதாக சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் பேசுகை யில், டாஸ்மாக் ஊழியர்கள், கடந்த 21 ஆண்டுகளாக சட்ட சமூக பாது காப்பற்ற நிலையில், அத்துக் கூலிக ளாகவும், பரிதாபகரமான சூழலிலும் பணியாற்றி வருகின்றனர். டாஸ் மாக் ஊழியர்களின் நீண்ட கால சட் டபூர்வ நியாயமான கோரிக்கைக ளுக்கு முதல்வரின் நேரடி தலை யீட்டை செய்ய வேண்டும். 480 நாள் பணி முடித்த டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரையும் பணி வரன்முறை செய்திட வேண்டும். டாஸ்மாக் ஊழி யர்களின் ஓய்வு வயதை 58 இருந்து 60 ஆக உயர்த்திட வேண்டும். தனிந பர் ஒருவருக்கு எத்தனை மது பாட் டில்கள் விற்பனை செய்யலாம் என் பது குறித்த விதிமுறையை உரு வாக்கிட வேண்டும். மதுக்கூட பணி யாளர்கள் மது பாட்டில்களை கையா ளக்கூடாது என்ற மதுவிலக்கு சட்ட விதிமுறை 1937-ஐ அமுல்படுத்த வேண்டும். இஎஸ்ஐ மருத்துவ திட் டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய எப்எல்-2 என்ற பெயரில் மனம கிழ் மன்றங்களை நடத்த அனுமதிக் கக்கூடாது. நீதிமன்ற உத்தரவுபடி காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமலாக்கம் செய் யும் விஷயத்தில் ஊழியர்களின் பணி சுமை, சுகாதாரம், இட நெருக்கடி போன்ற பிரச்சனைகளை கவனத் தில் கொண்டு தொழிற்சங்கங்களு டன் கலந்து பேசி தீர்வுகாண வேண் டும். காலி பாட்டில்கள் சேகரிப்பு மற் றும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தின் வருமா னத்தை (FL-2 தனியார் மதுக்கடைக ளுக்கு) தாரை வார்க்காமல் இருக்க வேண்டும். FL-2 தனியார் மதுக்கடை விற்பனை நேரத்தை (காலை 11.00 - இரவு 11.00) டாஸ்மாக் கடையின் விற் பனை நேரத்திற்கு (காலை 12.00 - இரவு 10.00) இணையாக மாற்ற வேண்டும். கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் சமூக விரோதி கள் தவறான அல்லது காழ்ப்பு ணர்ச்சியோடு கொடுத்த தகவல் அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்க ளின் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்திட வேண்டும். மதுவி லக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண் டும். கேரளா அரசை போல ஊதிய உயர்வு வழங்கிடும் பேச்சுவார்த் தையை உடனே தொடங்கிட வேண் டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் திர ளான டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற் றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, சம் மேளன பொதுச்செயலாளர் திருச் செல்வன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் ஜான்அந்தோணிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈரோட்டில், மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமியை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.