districts

மகள் திருமணத்திற்காக பரோலில் வந்த கைதி சாவு

திருநெல்வேலி, ஜூன் 2-

    பாளையை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே உள்ள நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் கொம்பன் ( 54). இவர் கொலை வழக்கில் சிவந்திபட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்ட னை கைதி யாக பாளை மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்தார்.  அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொம்பன், மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது.

   அதற்காக அவர் பரோலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நொச்சி குளத்திற்கு வந்திருந்தார். சனிக்கிழமை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில் வியாழக்கிழமை  இரவு திடீரென கொம்பன் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை கொம்பன் இறந்தார்.