கோவை, செப்.9- அமெரிக்கா சென்றுள்ள முதல் வர் இதுவரை 11 நிறுவனங்களிடம் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கோவையில் தெரிவித் தார். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக் கான மாபெரும் வங்கி கடன்கள் வழங் கும் முகாமை மதுரையில் விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடை பெற்ற மகளிர் குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாமில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கோவை மாவட் டத்தில் உள்ள 1727 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுமார் ரூ.96.47 கோடி கடன்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மகளிர் குழுக்களுக்கு அதிகளவு கடன் வழங்கிய வங்கி நிர்வாகத்தினருக்கு பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி கூறும் போது, கோவை மாவட்டத்தில் மக ளிர் குழுக்களுக்கு ரூ.96.47 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது,. இதனை முறையாக ஒருங்கிணைத்து பணி யாற்றிய ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் சென்று பார்க்கிறோம், அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. இதன் மூலம் மகளிர் தங் கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ண யித்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இதில் குடும்பத்திற் கான திட்டங்களையும் முதல்வர் கொண்டு வந்து ஒவ்வொரு துறையி லும் என்ன நடக்கிறது என்பதை கவ னிக்கிறார். அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் இதுவரை 11 நிறுவனங் களுடன் தமிழகத்தில் முதலீடு செய்ய ரூ. 4 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியான வேலை வாய்ப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங் களில் இருந்து பார்ப்போருக்கு நமது திட்டங்கள் பெரிய திட்டங்களாக தெரிகிறது, என்றார்.