districts

img

தெப்பக்குளம் போல் மாறும் நெசவாளர் காலனி பள்ளி

திருப்பூர், அக். 15 - திருப்பூர் நெசவாளர் காலனி மாநக ராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீருடன், கழிவுநீர் தேங்கி தெப்பக்குளம் போல் காட்சியளிக்கிறது. அடிக்கடி இது  போல் பாதிப்பு ஏற்பட்டாலும், இப்பிரச்சனைக் குத் தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் அவ சர, அவசிய உணர்வோடு நடவடிக்கை எடுக் காவிட்டால், விபரீதம் நிகழும் முன் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக பெய்த  மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து, சாலைகள் சீர்குலைந்து பல் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக நெசவாளர் காலனி  மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கடுமையாக  பாதிக்கப்பட்டது. கடந்த இருநாட்களாக பெய்த மழையின் போது, திருப்பூர் பி.என்.ரோடு நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளா கத்தில் மழைநீர் பெருக்கெடுத்து பாய்ந்தது.  இப்பள்ளி வளாகம் தாழ்வாக இருப்பதால் ஒவ்வொரு மழைக்கும் அந்த பகுதியில் உள்ள மழைநீர் பள்ளியை நோக்கி பெருக் கெடுத்து பாயும். தற்போது பெய்த மழையால்  பள்ளி வளாகம் தெப்பக்குளம் போல் மாறி யது. அத்துடன் வகுப்பறைகளுக்கு உள்ளே யும் தண்ணீர் புகுந்தது. இடுப்பளவுக்கு மழை நீர் தேங்கியது.

குறிப்பாக, கொங்கு நகர் முதல் நெசவா ளர் காலனி வரை உள்ள குடியிருப்புப் பகு திகளில் உருவாகும் கழிவுநீருடன் கிழக்கில்  இருந்து மேற்கு நோக்கி தாழ்வான பகுதியாக  இருப்பதால் மழைநீரும் வெள்ளமென பெருக்கெடுத்து இப்பள்ளி வளாகத்திற்குள் வருகிறது. பல ஆண்டு காலமாக இந்த பிரச் சனை நீடித்து வந்தாலும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. நெசவாளர் காலனி பள்ளி, வகுப்ப றையை மழைநீர் சூழ்ந்தது பற்றி பெற்றோர்  கூறும்போது, “நெசவாளர் காலனி உயர்நி லைப் பள்ளியில் ஆயிரம் பேர், தொடக்கப் பள் ளியில் 700 பேர் என மொத்தம் 1,700 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். இந்த வட்டா ரத்து ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் வீட் டுப் பிள்ளைகள் கல்வி பெறும் முக்கியமான  பள்ளியாக இது உள்ளது.  ஒவ்வொரு மழைக்கும் பள்ளி வளாகத் தில் தண்ணீர் தேங்குகிறது. இடுப்பளவு தண் ணீரில் சென்று குழந்தைகளை நாங்கள் அழைத்து வருகிறோம். சிறுவர்கள் இந்த  நீரில் மூழ்கி விடுவார்கள். கழிவு நீருடன் மழை நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள் ளது. மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு உரிய  நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் புகாமல் இருக்கவும், தண்ணீர் தேங் காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும், என்றனர்.

இத்துடன் இப்பள்ளி வளாகத்திலேயே புதிய வகுப்பறை அமைப்பதற்கான கட்டு மானப் பணியும் நடைபெற்று வருகிறது. பூமி  தோண்டப்பட்டு, காங்கிரீட் தூண்கள் அமைக் கப்பட்டுள்ளன. அந்த இடத்திலும் நீர் தேங்கி  குளம் போல் மாறிவிட்டது. இந்த இடத்தில் கட் டடம் கட்டுவது பாதுகாப்பாக நிலைத்து நிற்குமா என்ற சந்தேகம் உள்ளது என்று பெற் றோர் கூறுகின்றனர். தாழ்வான பகுதியாக இருப்பதால் இந்த  பள்ளியின் சுற்றுச் சுவர் பகுதியில், உயரமான  தடுப்பு ஏற்படுத்தினால், வெளிப்பகுதி தண் ணீர் உள்ளே புகுந்து வராமல் தடுக்கப்படும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்ட  அறிக்கை தயாரித்திருப்பதாக கூறப்பட்டா லும், பல மாதங்களாக எவ்வித முன்னேற்ற மும் ஏற்படவில்லை. எனவே 1700 மாண வர்கள் பயிலும் இப்பள்ளியில் விபரீதம் ஏதும்  ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் அவசர, அவசிய உணர்வோடு மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர், ஆசிரி யர்கள் வலியுறுத்துகின்றனர்.