வல்வில் ஓரி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
நாமக்கல், ஜூலை 30- கொல்லிமலையை ஆண்ட மன் னன் வல்வில் ஓரி அரசு விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட நீர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் கொல்லி மலை மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலை ஓரங்க ளில் மது பாட்டில்களை வீசி செல்வது, பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வது, சாலையோரத்தில் உணவு உண்டு விட்டு அப்படியே உணவு கழிவுகளை விட்டு செல்கின்றனர். இதனால், கொல்லி மலையில், பல்வேறு இடங்களில் குப்பைக் கழிவுகளாக காட்சியளிக்கி றது. கடந்த சில மாதங்களாக கோடை கால விடுமுறையை ஒட்டி அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றதா லும், கொல்லிமலையின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரமற்ற சூழல் உள் ளது. கொல்லிமலையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு கழிவுகளை அகற்ற வேண்டுமென கொல்லிமலை பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில், வருடம் தோறும் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் கொல்லிம லையை ஆண்ட மன்னன் வல்வில் ஓரி அவர்களைப் போற்றும் வகையில் இரண்டு நாள் அரசு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதன் கார ணமாக பல்வேறு அரசுத் துறை சார்ந்த நிகழ்வுகள் கொல்லிமலையில் நடை பெற உள்ளது. இதனையடுத்து, நாமக் கல் மாவட்ட ஆட்சியர் உமா, சேந்தமங்க லம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னு சாமி முன்னிலையில், கொல்லிமலை செல்லும் பாதை கொல்லிமலையின் பல்வேறு இடங்களில் தூய்மைப் படுத்தும் பணிகளானது நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கள், தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு தூய்மைப் பணிகள் நடை பெற்று வருகிறது. மதுக்கடைகளுக்கு விடுமுறை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலை வட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்ப னைக் கடைகளான 6153 (செம்மேடு), 6218 (சோளக்காடு), 6210 (செங்கரை), 6186 (காரவள்ளி) ஆகிய நான்கு கடைக ளும் ஆக.1, 2, 3 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் சிறுவர்கள்
நாமக்கல், ஜூலை 30- சிறுவர்கள் இருசக்கர வாகனம், சரக்கு ஆட்டோ, டிராக்டர் போன்ற கனரக வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளதால், விளைவுகள் குறித்து ஒவ்வொரு பள்ளிகளிலும் போக்குவரத்து துறையின் சார்பில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம் சேலம், ஈரோடு, நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு ஊர்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. பள்ளிபாளையத்தில் பால கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருவதால், பல்வேறு பகுதி களில் வாகனங்கள் போக்குவ ரத்து மாற்றம் செய்யப்பட்டு வாக னங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் பள்ளிபாளையத் தில் சிறுவர்கள் இருசக்கர வாக னத்தை ஓட்டுவது, சரக்கு ஆட்டோ ஓட்டுவது, டிராக்டர் போன்ற கனரக வாகனங்களை முறையான லைசன்ஸ் இல்லா மல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக ஓட்டி செல் வது போன்ற செயல்கள் அதிக ரித்து வருகிறது. இது குறித்து பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட் டாளர்கள் கூறுகையில், பள்ளிபா ளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான அரசு பள்ளிகள் உள் ளது. இங்கு, மாலை பள்ளி முடிந்து வரும் மாணவர்களில் ஒரு சிலர் பள்ளி சீருடைகளை கூட கழற்றா மல், அப்படியே இரு சக்கர வாக னத்தை ஓட்டிச்செல்கின்றனர். இரு வர் முதல் நான்கு பேர் வரை ஒரே இருசக்கர வாகனத்தில் செல்வதை அதிகளவு காண முடிகிறது. 18 வயது நிரம்பாத பள்ளி சிறுமிக ளும் இதுபோல செல்வதை காண முடிகிறது. போக்குவரத்து போலீ சார் அவ்வப்போது இதுபோல வரும் சிறுவர்களை மடக்கிப் பிடித்து அவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர். இருப்பினும, முறையற்ற வகையில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப் படுகிறது. இது இருசக்கர வாகனத் தோடு நிற்காமல், அதிகளவு சரக்கு ஆட்டோவை 18 வயதிற்கு குறை வான சிறுவர்கள் உரிமம் ஏதும் பெறாமல் அதிவேகமாக ஓட்டிச் செல்கின்றனர். இதுகுறித்து ஒவ் வொரு பள்ளிகளிலும் போக்குவ ரத்து துறையின் சார்பில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . மிகக் குறைவான வயது உடைய சிறுவர்களிடம் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனும திக்கும் பெற்றோர்கள் மீது, வழக் குப் பதியவும் சட்டத்தில் இடம் உள்ளது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். முறை யற்ற வகையில் வாகனம் ஓட்டுவ தால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றனர்.
ஓய்வூதியர் சங்க பேரவை
தருமபுரி ஜூலை 30- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் நல்லம்பள்ளி வட்ட 5 ஆவது பேரவைக் கூட்டம் செவ்வ யன்று சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. ஓய்வூதி யர் சங்க வட்டத் தலைவர் ஜி.குணசேகரன் பேரவைக்கு தலைமை ஏற்றார். செயலாளர் சி.காவேரி, பொருளா ளர் எஸ்.வையாபுரி ஆகியோர் அறிக்கையை முன்வைத் தனர். பேரவையில், மாவட்ட துணைத்தலைவர் இ.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பொருளாளர் கே.கேசவன் ஆகியோர் உரை யாற்றினர். ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் கே.புக ழேந்தி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். ஓய்வூதி யர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
பொங்குபாளையம் ஊராட்சியில் விடுபட்ட குடியிருப்புகளை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்க்க சிபிஎம் வலியுறுத்தல்
திருப்பூர், ஜூலை 30 – திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொங்குபாளையம் ஊராட்சியில் விடுபட்ட குடியிருப்புப் பகுதிகளை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்த்து ஆற்றுக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் காளம்பாளையம் கிளைச் செயலாளரும், முன்னாள் பொங்குபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஆர்.விஸ்வநாதன் திங்களன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்கு அளித்த கடிதத்தில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட் பட்ட 10 ஊராட்சிகளைச் சேர்ந்த 165 குடியி ருப்பு பகுதி மக்களுக்கு, நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் ஆற்றுக்குடிநீர் வழங்கும் வகையில் கூட்டுக்குடிநீர்த் திட் டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் சோதனை ஓட்டம் நடை பெற்று வருகிறது. எனினும் இந்த திட்டத்தில் பொங்குபா ளையம் ஊராட்சி 3ஆவது வார்டைச் சேர்ந்த 6 எஸ்.பி.கே.நகர், ஏ.டி.காலனி, பி.ஆர்.நகர், ஸ்ரீசாய்குமரன் நகர், ஸ்ரீஓம்சக்தி நகர், ராஜ் பிரியா அவென்யூ, மாரப்பன்பாளையம் பூத் தார் நகர், மகிழ்நகர் செல்வகணபதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 7 மேல்நிலைத் தொட்டிகள் இணைக்கப்படவில்லை. அதே போல் 8ஆவது வார்டுக்கு உட்பட்ட பாபுஜி நகர், திருமால்நகர், கிரீன்வேலி, குமரன் நகர், பாபுஜிநகர் விரிவு, என்எஸ்பி ராஜா கார்டன், யுவராஜ் கிரீன் கார்டன், 8 எஸ்.பி.கே.நகர், அம் சவிநாயகர் நகர், ஸ்ரீ சிவசக்தி நகர், பிருந்தா வன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 மேல் நிலைத் தொட்டிகளும் இணைக்கப்பட வில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்குப் பாது காக்கப்பட்ட ஆற்றுக்குடிநீர் மறுக்கப்பட்டுள் ளது. திருப்பூர் 2ஆவது, 3ஆவது திட்டக் குடி நீரும் சரிவர கிடைப்பதில்லை. எனவே விடு பட்ட இந்த பகுதிகளில், மேற்கூறிய 11 மேல்நி லைத் தொட்டிகளை கூட்டுக்குடிநீர் திட் டத்தில் இணைக்க வேண்டும். இது தொடர் பாக பொங்குபாளையம் கிராம ஊராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றி கடந்த ஜூலை 10ஆம் தேதியன்று திருப்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வழியாக திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்கு நருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே இதன் அடிப்படையில் விடுபட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு கூட்டுக்குடிநீர்த் திட் டத்தில் இணைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கனமழையால் இருளில் மூழ்கிய கிராமங்கள்!
உதகை, ஜூலை 30- குன்னூரில் பெய்து வரும் கனமழையால், மின்சார மின்றி பல கிராமங்கள் இருளில் மூழ்கின. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகு திகளில் பெய்து வரும் தொடர் மழையால், பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு சென்ற தொழி லாளர்கள் கடும் அவதியடைந்தனர். கூடலூர், முது மலை, நடுவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்து வரு கிறது. மழைக்கு உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை யில், தவளை மலைஅருகே மண் சரிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. இதனால், உதகை - கூடலூர் மற்றும் கேரளம், கர்நாடகா இடையே இயக்கப் படும் அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவ குத்து நின்றன. வனப்பகுதி என்பதால், ஓட்டுநர்களும், பயணிகளும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து தகவ லறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறி யாளர் பிரேம்குமார் தலைமையிலான ஊழியர்கள், பொக்லைன் வாயிலாக மண்ணை அகற்றி, போக்கு வரத்தை சீர் செய்தனர். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் உதகை, குன்னூர், குந்தா, கோத்த கிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு செவ் வாயன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டி ருந்தார். குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சரிந்துள்ளன. வருவாய்த் துறையினர், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப் புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மரங்கள் முறிந்து விழுந்ததாலும், விடிய, விடிய கனமழை பெய்ததாலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தில் கடுங்குளிரும் நிலவி வருகிறது. இத னால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கோவை, ஜூலை 30- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால், கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் திங்களன்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சிறுவாணி அணைப்ப குதியில் 162 மில்லி மீட்டர் மலையும், அடிவாரம் பகுதி களில் 85 மில்லி மீட்டர் மலையும் பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டமும் 44.08 அடியாக உயர்ந்து உள்ளது. இதனிடையே, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் கடந்து செல் கிறது. இதனால், அதனை சுற்றியுள்ள தடுப் பணை குளங்கள் நிரம்பி வழிகிறது. ஆலாந்துறை, சித்திரை சாவடி, ஆத்துப்பாலம் காளவாய் பகுதிக ளில் உள்ள தடுப்பணைகள் நிறைந்து அருவிபோல் வழிந்தோடி வருகிறது. எந்த நேரத்திலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செல்பி எடுத்து வரு கின்றனர். அதுபோல், உக்கடம் பெரியகுளம், குறிச்சிகுளம், செல்வசிந்தாமணி குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், நீர்மட்டம் உயரும் சூழ லும் ஏற்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நிலைமையை உணர்ந்து அனைத்து இடங்களிலும் பொதுமக்களின் கண்களில் படும்படியாக எச்சரிக்கை மற்றும் அறிவுப்பு பலகைகளை வைத்து, பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
முதுநிலை மாணவர்களுக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க அழைப்பு
உதகை, ஜூலை 30– நீலகிரி அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கடைசி நாள் என தெரி விக்கப்பட்டுள்ளது. உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராமலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நீல கிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரியில் 18 இள நிலை படிப்புகளும் 15 முதுநிலை படிப்புகளும் உள்ளது. இங்கு, 4500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நி லையில், 2024 – 25 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு 4 கட்ட கலந்தாய்வுகள் முடிந்துவிட்டது. அரசு கல்லூரியில் 20 சதவீத இடங்கள் அதிகரிக் கப்பட்டதால், தற்போது உதகை அரசு கலைக்கல்லூ ரியில் 1300 இடங்களாக அதிகரித்து உள்ளது. இதில், 90 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. மீதமுள்ள இடங்க ளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். கலந் தாய்விற்கு வரும்போது மதிப்பெண் சான்றுதல், மாற்று சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்கம் என அசல் மற்றும் நகல்கள் எடுத்து வர வேண்டும். கட் டண விகிதம் மாநில பாடத்திட்டம், 4500 ரூபாய் இதர பாடத் திட்டம் 5000 ரூபாய் ஆகும். இதேபோல், உதகை அரசு கலைக்கல்லூரியில் 15 துறைகளில் உள்ள சுமார் 300 முதுநிலை காலியிடங்க ளுக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க அறி வுறுத்தப்பட்டு உள்ளது. இதன்படி www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வருகிற 7 ஆம் தேதியன்று கடைசி நாள் ஆகும். முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உதகை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை சிறப்பு மையங் கள் இயங்கி வருகிறது, தேவைப்படும் மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரி வித்துள்ளார்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி
கோவை, ஜூலை 30- வால்பாறையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், பாட்டி மற்றும் பேத்தி ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. கோவை வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள சோலையார் அணை இடதுகரை பக்கத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, ராஜேஸ்வரி மற்றும் அவரது பேத்தி தனப்பிரியா ஆகிய இருவரும் சிக்கினர். இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையி னர் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த வர்களை மீட்டனர். இதில், இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பறிமுதல் செய்த பணத்தை கையாடல் செய்த காவலர்கள்
கோவை, ஜூலை 30- குற்றவாளியிடம் கைப்பற்றிய பணத்தை கையாடல் செய்த இரண்டு காவலர்களை கட்டுப்பாட்டு அறைக்கு பணி யிடை மாற்றம் செய்து, கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில், புலனாய் வுப் பிரிவில், காவல் உதவி ஆய்வாளர் பார்வதி மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) யூசுப் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு குற்ற வாளியிடம் இருந்து சில தொகையை காவலர்கள் கைப்பற்றி யுள்ளனர். கைப்பற்றப்பட்ட தொகையில் ஒரு பகுதியை இவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார் கோவை மாநகரகாவல் ஆணையர் கவனத்திற்கு சென் றது. இதனையடுத்து, துணை காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதில், இவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து, காவல் ஆணையாளர் வெ.பாலகிருஷ்ணன், இருவரையும் காவல் கட்டுப்பாட்டுஅறைக்கு பணியிடை மாற்றம் செய்து உத்தர விட்டார். குற்றவாளியிடம் பறிமுதல் செய்த பணத்தை கையா டல் செய்த காவலர்களின் செயல் பொது வெளியில் தெரிய வரவே, பொதுமக்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய நபர் மீட்பு
நாமக்கல், ஜூலை 30- காவிரி ஆற்றின் நடுவே பாறையின் மீது படுத்திருந்த போது, தண்ணீர் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). பெற்றோரை இழந்த இவர், உறவினர்கள் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். சற்றே மனநலம் பாதிக் கப்பட்டதாக கூறப்படும் அவர், பவானி புதிய பேருந்து நிலை யம் அருகேயுள்ள நீரேற்று நிலையம் வழியாக காவிரி ஆற் றின் நடுவே உள்ள பாறைக்கு சென்று ஞாயிறன்று படுத்தி ருந்துள்ளார். இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து ஆற்றில் ஞாயிறன்று மாலை திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படி யாக அதிகரித்து பாறையை சூழ்ந்தபடி பெருக்கெடுத்து ஓடி யது. இதனால், அதிர்ச்சியடைந்த பெருமாள் தண்ணீரைக் கடந்து கரை திரும்ப முடியாமல் பாறை மீது தவித்து வந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் பவானி தீயணைப்பு நிலையத் திற்கு திங்களன்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) ஆர்.முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர் கள், பரிசல் மூலமாக பாறைக்குச் சென்று, தண்ணீருக்கு மத்தி யில் விடியவிடிய தவித்து வந்த பெருமாளை பாதுகாப்பு டன் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்ட அறிவிப்பால் சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் தொடங்கியது
ஈரோடு, ஜூலை 30- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்ட அறிவிப்பால் நிறுத்தி வைக்கப் பட்ட பட்டரமங்கலம் சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம், சத்தி வட்டம், புதுப்பீர் கடவு கிராமத்திற்குட்பட்ட பட்டாரமங்கலம். இங்கு. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீல கிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமு தாயக்கூடம் கட்ட ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டது. பணிகள் தொடங்கிய நிலை யில், அப்பகுதியில் உள்ள சாதி ஆதிக்க சக்தி யினர், எங்கள் பகுதியில் இந்த சமுதாயக் கூடம் கட்டினால், பட்டியலின சாதியினர் இங்கு வருவார்கள் என தடுத்து பிரச்ச னையை ஏற்படுத்தினர். மேலும், அஸ்திவாரத்திற்கு நடப்பட் டுள்ள கம்பிகளை எல்லாம் பிடுங்கி எரிந்து சேதப்படுத்தினர். இதனை தட்டி கேட்ட பட்டி யல் சமூக மக்களை சாதியைச் சொல்லித் திட்டி, மிரட்டிச் சென்றனர். இதனால், ஏற் பட்ட பதட்டத்தால் சமுதாயக்கூட பணிகள் நிறுத்தப்பட்டது. இதனையறிந்த, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனையடுத்து, சத்தி வட்டாட்சி யர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், காவல் துறை ஆய்வாளர், காவல்துறை துணை கண் காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விபரங்களை தெரிவித்தனர். இதனைத்தொ டர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பப்பட்டது. ஆனாலும், உரிய நட வடிக்கை எடுக்கப்படாத நிலையில், செவ் வாயன்று (ஜூலை 30) சத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் அறிவிக்கப் பட்டது. போராட்டத்திற்கு தயாரான நிலையில், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, ‘சமுதாயக்கூட கட்டுமானப் பணிகளை நடத் துகிறோம். போராட்டத்தை கைவிடுங்கள்’ என கேட்டுக்கொண்டனர். இந்நிலையில், 20க்கும் மேற்பட்ட காவ லர்கள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்ட சமுதாயக்கூட கட்டுமானப் பணிகள் துவக்கி நடைபெற்று வருகிறது. எனினும் சாதியைச் சொல்லித் திட்டி, கட்டுமானப்பணிகளை நிறுத்தியவர்களை கைது செய்திட வேண் டும் என வலியுறுத்தப்பட்டது. விரைவில் நடவ டிக்கை எடுக்கிறோம் என காவல் துறையினர் உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட் டத்தினை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட் டது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற, போராட்ட ஒத்திவைப்பு விளக்கக் கூட்டத் திற்கு, ஒன்றியச் செயலாளர் கே.ரங்கசாமி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலை வர் யு.கே.சிவாஞானம், மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே.ஆர்.திருத்தணி காசலம், ஒன்றியச் செயலாளர் கே.எம்.விஜய குமார், கோபி தாலுகாச் செயலாளர் துரை சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.