districts

சிறப்பான சேவை, தொடர் கண்காணிப்பு

சேலம், டிச.1- சிறப்பான சேவை மற்றும் தொடர் கண்கா ணிப்பு காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார  நிலையங்களில், மகப்பேறு சிகிச்சைக்கு வரு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற தென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். சேலம் மாநகராட்சி பகுதியில் 16 நகர்ப்புற  ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு  வருகிறது. இவற்றில் கர்ப்பிணிகளுக்கு சிறப் பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. சேலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில், சராசரியாக மாதம் 60 முதல்  70 சுகப்பிரசவங்கள் நடைபெற்று வந்தன. முதல் முறையாக நடப்பாண்டில், தொடர்ந்து  7 மாதமாக மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட  சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன. இதில்,  தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார  நிலையத்தில், அதிக சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு கர்ப்பிணியும் ஆரம் பம் முதல் தொடர்ந்து கண்காணிக்கப்ப டுவதால், பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல் கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தக்க  ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப் பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் தேவை யின்றி செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாநகராட்சியில் கடந்த ஜூனில் 105,  ஜூலையில் 102, ஆகஸ்ட் மாதத்தில் 121,  செப்டம்பரில் 117, அக்டோபரில் 103, நவம்ப ரில் 105 என நடப்பாண்டில் மொத்தம் 1,101  சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகா ரிகள் கூறுகையில்,

பல்வேறு நோய்களுக் காக தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று செல்கின் றனர். கர்ப்பிணிகளுக்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து ரத்த பரிசோதனைகள், இதர சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து செவ் வாய்க்கிழமைகளிலும் நடைபெறும் கர்ப்பி ணிகளுக்கான பரிசோதனையில் சராசரி யாக 50 முதல் 60 நபர்கள் பங்கு பெற்று ஆலோ சனை பெற்று வருகின்றனர். அவர்களின் நலனை காக்கும் வகையில் கர்ப்பம் குறித்த  விளக்கம் மற்றும் சந்தேகங்கள், யோகா வகுப்பு நடத்தப்படுகின்றன. கருவுற்ற பெண் ணுக்கு ஏற்படும் உயர் அழுத்தம், உடல் பரு மன், வலிப்பு உள்ளிட்டவற்றை கண்டறிய தேவையாக ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரி சோதனைகள் செய்யப்படுகிறது. இதனால், கர்ப்பிணிகள் ஆர்வத்துடன் நகர்ப்புற ஆரம்ப  சுகாதார நிலையங்களை நோக்கி வருகின் றனர். ஒவ்வொரு கர்ப்பிணியும் ஆரம்ப முதல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் பிரவச  காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் உடனுக்கு டன் கண்டறியப்பட்டு தக்க ஆலோசனை, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற சிறப்பான செயல்பாடுகளால், நடப் பாண்டில் 11 மாதத்தில் 1101 சுகப்பிர சவங்கள் நடைபெற்றுள்ளன, என்றனர்.