நாமக்கல், ஏப்.7- ராசிபுரம் அரசு மருத்துவமனை சுற்றுச்சு வரை ஒட்டியுள்ள முட்புதற்கு தீ வைக்கப்பட்ட தில் எழுந்த புகையால் கர்ப்பிணிகள் உட்பட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட் டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத் துவமனையின் பின்புற சுற்றுச்சுவரை ஒட்டி வெளிப்பகுதியில் புதர் மண்டி கிடந்தது. இதற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் எழுந்த புகையானது ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டு பகுதிக்கு சென்றது. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் கடும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். சிலர் மூச்சுத்திணறலை கட்டுப் படுத்த முடியாமல் வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.