கோயம்புத்தூர், ஜன.22- கோவையில் வாழும் புலம்பெய ர்ந்த மலையாள மக்களுக்கான பிரவாசி சங்கமம் மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சி கோயம்புத்தூர் மலையாள சமாஜம் அரங்கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது.
கோயம்புத்தூர் மலையாள பண்பாட்டு மேடையின் சார்பில், கோவையில் வாழும் மலையாளி மக்க ளுக்காக கேரளா அரசாங்கம் அறி வித்துள்ள நலவாரியம், காப்பீடு திட்டம் போன்ற நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கும், தெரிந்து கொள்வதற்கும் உதவும் வகையில், பிரவாசி சங்கமம் என்ற பெயரில் கருத்த ரங்கமும், தமிழர்களின் கலாச்சார விழா வான பொங்கல் விழாவும் ஞாயி றன்று நடைபெற்றது.
சி.பிரபாகரன் வர வேற்றார். இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், கேரளா அரசின் நலத்திட்டங்களையும், சலுகை களையும் புலம்பெயர்ந்து வாழும் மலை யாள மக்கள் முழுமையாக பயன் படுத்தி பலன் அடைய வேண்டும். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மலையாள மக்களின் பங்களிப்பு மிக அதிகம். எனவே, கோவையில் வசிக் கும் கேரள மக்கள் கோயம்புத்தூர் மலையாள பண்பாட்டு மேடை மூலம் ஒன்றிணைந்து பலனடைய வேண்டும் என்றார்.
கேரள அரசின் திட்டங்கள்
ம்பெயர்ந்து வாழும் கேரள மக்க ளுக்கான நலவாரியத்தின் என்ஓ ஆர்கேஏ (NORKA) அமைப்பின் பொது மேலாளர் ஆஜித் கோலசேரி மற்றும் அனு பி.சாக்கோ ஆகியோர் கேரளா அரசின் நல வாரியத்தின் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை பயன்படுத்தி பலன் அடைவது பற்றி விளக்கினர்.
அதில் புலம்பெயர்ந்து வாழும் மலை யாளிகளுக்கான கேரள மாநில அரசின் நலவாரியத்தில் பதிவு செய்து கொள் பவர்களுக்கு காப்பீடு திட்டத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையை ரூ.372 செலுத்தி பெற்றுக்கொண்டால், பய னாளிகளில் எவரேனும் பதிவு செய்த மூன்று வருடத்தில் உயிரிழந்தால், பய னாளியின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்ச மும், விபத்தில் பாதிக்கப்பட்டால் ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும். நல வாரிய பயனாளிகளுக்கு கேரளா அர சாங்கம் ரூ.200 மாதந்தோறும் செலுத்தி வருகிறது. நலவாரியத்தில் பதிவு செய்து மூன்று வருடம் பூர்த்தியான வர்கள் 60 வயதை கடந்தால் ரூ.3 ஆயிரம் பென்சன் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், நலவாரிய உறுப்பினர் களுக்கு பெரும் நோய் பாதிப்பு ஏற் பட்டால் ரூ.50 ஆயிரம், நலவாரிய உறுப் பினர்களின் பெண் குழந்தைகளுக்கு திருமணத்தின் போது ரூ.10 ஆயிரம், குழந்தைகளின் பட்டப்படிப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலை விஷயமாகவோ அல்லது ஏனைய படிப்பு விஷயமாக செல்ல விரும்பும் மலையாளிகளுக்கு, நலவாரியம் சார்பில் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பும் மற்றும் கல்விக்கான உதவி யும் வழங்கப்படுகிறது.
28 மாநி லங்களில் உள்ள விமானநிலையங் களில் புலம்பெயர்ந்த மலையாளி களுக்கான இலவச ஆம்புலன்ஸ் வசதி யும் செய்து தரப்பட்டுள்ளது என விளக்கப்பட்டது. இந்நிகழ்வில் கேரள மாநில முன்னாள் சபாநாயகரும், கேரளா அரசின் புலம்பெயர்ந்தோர் நலவாரி யத்தின் துணைத்தலைவருமான பி.ஸ்ரீராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ஆர்.முருகேசன், யு.கே.சிவஞானம், சிடிஎம்ஏ தலை வர் எம்.கே.சோமன் மேத்யூ, சிஎம்எஸ் அறக்கட்டளை தலைவர் கே.ராஜ கோபாலன், கோயம்புத்தூர் மலை யாளி சமாஜத்தின் தலைவர் கே.கே. ராமச்சந்திரன் உட்பட 500க்கும் மேற்பட்ட மலையாள மக்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் துவங்கிய இந்த விழாவில், கோவை நிகர் குழுவினரின் பறையிசை பார்வையாளர்களை கவர்ந்தது. முடிவில், கோவிந்தன் குட்டி நன்றி கூறினார்.