தருமபுரி, நவ.2- மார்க்சிஸ்ட் கட்சியின் பென் னாகரம் நகரச் செயலாளராக பி. ஆர்.செல்வம் தேர்வு செய்யப் பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நகர 3 ஆவது மாநாடு, பென்னாகரம் கார்ல் மார்க்ஸ் திருமண மண்டபத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங் கத்தில் சனியன்று நடைபெற்றது. நகரக்குழு உறுப்பினர்கள் எம்.தனபால், எல்.ஈஸ்வரி, எம்.சுமதி ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர் கே.பி.கரூரான் செங்கொடியை ஏற்றி வைத்தார். நகரக்குழு உறுப்பினர் எஸ். வெள்ளியங்கிரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சி. ராஜி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து துவக்கவுரை யாற்றினார். நகரச் செயலாளர் கே.வெங் கடாச்சலம் அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ரவி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், ஒகேனக்கல் குடிநீர் 2 ஆம் கட்ட திட்டப்பணிகளை துவங்க வேண்டும். புதியதாக கட்டப் பட்ட பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வெளிப்படையான ஏலம் விட வேண்டும். முள்ளு வாடி ஏரியை தூர்வாரி, பூங்கா அமைத்துத்தர வேண்டும். பென்னாகரம் பேரூராட்சி முழு வதும் குடிநீர் குழாய் பதிக்க தெரு சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். பென்னாகரம் - மேச்சேரி சாலை முதல் கோடி யூர் சாலை வரை பழுதடைந்துள்ள தார்ச் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் பென்னா கரம் நகரச் செயலாளராக பி.ஆர்.செல்வம் மற்றும் 11 நகரக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் நிறைவுரையாற்றி னார்.