districts

500 பேருக்கு மளிகைப் பொருட்கள் பி ஆர் நடராஜன் எம் பி வழங்கினார்

கோவை, ஜூன் 12–  

கொரோனா பெருந்தொற்று கார ணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊர டங்கால்  பாதிக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினர் 500 பேருக்கு மளிகை பொருட்களை பி.ஆர்.நடராஜன் எம்.பி., வழங்கினார். கொரோனா பெருந்தொற்று கார ணமாக கோவை மாவட்டத்தில்  கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நடை முறையில் உள்ளது.  

முறைசாரா தொழில் உள்ளிட்ட  எதுவும் இயங்கவில்லை. இதனால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர  குடும்பத்தினர் வருவாயின்றி அவதிக் குள்ளாகி வருகின்றனர். இதனை யடுத்து மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர் நிவாரண நடவ டிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ரத்தினபுரி மகளிர் கூட்ட மைப்பு சார்பில் கோவை ரத்தினபுரி பகுதியில் சனியன்று மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பெண்க ளுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்வை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயலா ளர் வி.ராமமூர்த்தி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் வேலுசாமி, வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன் மற்றும் மேற்கு அரிமா சங்கம் பாபு, ரஞ்சித் கேட்டரிங் உரி மையாளர் ரஞ்சித் மற்றும் ரத்தின புரி கூட்டமைப்பு தலைவர் ராதாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;