திருப்பூர், அக். 4 - திருப்பூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுல் தான்பேட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில், சமுதாய நலக்கூடம் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கி தந்தார். இந்த நிதியில் கட்டு மான வேலை துவங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற் றது. மங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி முன் னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் க.கணேசன், ஒன்றிய கவுன்சிலர் ஜானகி மணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராதா நந்தகுமார், பால்ராஜ், நடராஜ், இத்திரிஸ், அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். திமுகவின் கிளைச் செயலாளர் கோபால், மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான சென்னியப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, காங்கிரஸ் கண்ணன், சபா துரை, கொங்குநாடு மக்கள் கட்சியின் ஜோதிபாசு, சுல்தான்பேட்டை மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் கந்தசாமி, முன்னாள் வார்டு உறுப்பினர் முருகேஷ், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண் டனர். சமுதாய நலக்கூடம் கட்ட ரூ.50 லட்சம் ஒதுக்கித் தந்த பி. ஆர்.நடராஜன் எம்.பி.க்கு ஊர் மக்கள், ஊராட்சி நிர்வாகத் தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.