நாமக்கல், ஜூலை 5- கூலி உயர்வு வழங்காத விசைத் தறி நிர்வாகங்களை கண்டித்து நாமக் கல் மாவட்ட விசைத்தறித் தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விசைத்தறித் தொழிலா ளர்களுக்கு, கடந்த 22.5.2023 ஆம் தேதியன்று கூலி உயர்வு ஒப்பந் தம் போடப்பட்டது அதன்படி ஜூன் 1 முதல் 3 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், ஒப்பந் தத்தை மதிக்காமல், தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வு வழங்காத விசைத்தறி நிர்வாகங்களை கண்டித் தும், இப்பிரச்சனையில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தியும் சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர் சங்கத் தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் அருகே உள்ள ஐந்து மெத்தை ஆயக் காட்டூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு விசைத் தறித் தொழிலாளர் சங்க ஒன்றிய உதவித்தலைவர் எம்.ஜெயவேல் தலைமை வகித்தார். இதில், சங்கத் தின் மாவட்டச் செயலாளர் அசோ கன், ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துக்குமார், தலைவர் அசன், பொருளாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.