districts

img

கூலி உயர்வு வழங்காத நிர்வாகங்களை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

நாமக்கல், ஜூன் 28- கூலி உயர்வு வழங்காத விசைத் தறி நிர்வாகங்களை கண்டித்து  தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் விசைத்தறி தொழி லில் பணிபுரியும் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும், முதலாம் ஆண்டு 7 சதமும், இரண்டாம் ஆண்டு 10 சதமும் கூலி உயர்வு  வழங்க வேண்டும் என கடந்த ஏப்ரல்  மாத இறுதியில், பள்ளிபாளை யத்தில் விசைத்தறி ஜவுளி நிர்வா கங்கள் மற்றும் விசைத்தறி தொழிற் சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.  அதன் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து கூலி உயர்வை பல்வேறு விசைத் தறி நிர்வாகங்கள் வழங்கி வரு கின்றன. ஆனால், பள்ளிபாளையம்  நகராட்சிக்கு உட்பட்ட ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள 1ஆவது கிராஸில் உள்ள முருகன் டெக்ஸ்  மற்றும் பள்ளிபாளையம் காவல்  நிலையம் பின்புறம் உள்ள மூர்த்தி  டெக்ஸ் ஆகிய இரு விசைத்தறி  நிர்வாகங்கள் தொழிலாளர் களுக்கு கூலி உயர்வை வழங்க வில்லை. இதனால், விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.  இந்நிலையில் விசைத்தறி நிர் வாகங்கள் ஏற்றுக்கொண்ட கூலி உயர்வை வழங்க கோரியும், இந்த  பிரச்சனையில் அரசுத்துறை அதி காரிகள் தலையிட வலியுறுத்தியும் வியாழனன்று (இன்று) பள்ளி பாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்  முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசைத்தறி தொழிற்சங்கத் தினர் தெரிவித்தனர்.