சென்னை, மார்ச் 9- மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்பக் கோரி மார்ச் 28இல் கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ள தாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங் களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள் ளது. இதுகுறித்து எஸ்.ராஜேந்திரன் (தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு- சிஐடியு), சேவியர் (ஐஎன்டியுசி) ஆகியோர் சென்னையில் வியாழனன்று (மார்ச் 9) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 22.2.2018 அன்று முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அதனடிப்படையில் புதிய பதவிகள் ஏற் படுத்தப்பட்டதால் 58 ஆயிரம் காலிப்பணி யிடங்கள் உள்ளன. கள உதவியாளர் உதவிப் பொறியாளர் கணக்கீட்டாளர் இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்ப ப்படாமல் உள்ளது. இவற்றை நிரப்பாமல் அவுட் சோர்சிங் முறையை நிர்வாகம் அமல் படுத்துகிறது. அவுட்சோர்சிங் முறையை கொண்டு வருவது, மின்சார வாரியம் தனி யார்மயத்தை நோக்கி செல்வதற்கான நட வடிக்கையாகும். எனவே அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.
முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்துக
அரசாணை 100இன் அடிப்படையில் பணி யாளர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய, முத்தரப்பு ஒப்பந் தத்தை ஏற்படுத்த வேண்டும். பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினார்கள் ஆனால் அதற்கான எந்த நட வடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.12.2019 முதல் ஊதிய உயர்வு வழங்கியிருக்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி காலம் தாழ்த்தினார்கள். வரும் நவம்பர் மாதத் தோடு நான்கு ஆண்டுகள் முடிவடைய உள்ளன. ஆனால் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. '
பழைய ஓய்வூதிய திட்டம்
கடந்த ஜனவரி மாதம் பேச்சு வார்த்தையின் போது ஈரோடு தேர்தலை காரணம் காட்டினார்கள். இப்போது அமைச்சர் இன்னும் ஓரிருவாரங்களில் இறுதி செய்யப்படும் என அமைச்சர் தெரி வித்துள்ளார். ஆனால் எப்போது இறுதிப் படுத்துவார்கள் என்பது கேள்விக்குறி யாகவே உள்ளது. கடந்த காலங்களில் போராடும் போது பிபி 2 ரத்து செய்யப்படும் எனக் கூறினார்கள். ஆனால் இதுவரை ரத்து செய்யவில்லை. 1.12.2019 முதல் மின்வாரிய பணி யாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை வழங்கப்படவில்லை.இந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பலகட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் இது வரை தீர்வு காணப்படவில்லை. எனவே முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 28ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க உள்ளோம். இதில் 16 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. பேரணியில் மாநிலம் முழு வதிலும் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொள்வார்கள். அதற்கு முன்பாக பேரணியை விளக்கி வரும் 17ஆம் தேதி அனைத்து வட்ட மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு கூட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இச்சந்திப்பின் போது தொழிற்சங்க தலைவர்கள் கே.ரவிச்சந்திரன் (சிஐடியு), சுப்பிரமணி (எச்.எம்.எஸ்), சந்திரசேகர் (ஏஇஎஸ்யூ), ஜி.கார்த்திகேயன் (பொறி யாளர் சங்கம்), விஜயரங்கன் (அதிமுக) ஆகி யோர் இருந்தனர்.