districts

img

7 சதவிகிதம் கூலி உயர்வு வலியுறுத்தி சைமாவுக்கு பவர் டேபிள் சங்கம் கடிதம்

திருப்பூர், ஜூன் 19 - திருப்பூர் பனியன் தையல் நிலைய  உரிமையாளர்களுக்கு ஒப்பந்தப்படி இந்த ஆண்டு 7 சதவிகித கூலி உயர்வை  பனியன் நிறுவனங்கள் வழங்க பவர் டேபிள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் பனியன் தையல் நிலைய  உரிமையாளர்கள் (பவர் டேபிள்) சங்க  அலுவலகத்தில் திங்களன்று சங்கத் தின் தலைவர் ஆர்.நந்தகோபால் தலை மையில் செயற்குழு கூட்டம்  நடைபெற் றது. இதில் இந்த வருடம் அமல்படுத்த  வேண்டிய ஏழு சதம் கூலி உயர்வை உட னடியாக அமல்படுத்த வலியுறுத்தி சைமாவுக்கு கடிதம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் வரும் 24ஆம் தேதிக்குள் ஏழு சதவிகித கூலி  உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பவர் டேபிள் நிறுவனங்களை இயக்க முடி யாத நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள் ளனர். இந்தக் கூட்டத்தில் சங்கச் செயலா ளர் கே.எஸ்.முருகேசன், உதவித் தலை வர் நாகராஜ், பொருளாளர் சுந்தரம் உள் பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 4  ஆம்  தேதி நான்காண்டு கால கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் படி முதல் வருடம் 17 சதவிகித கூலி  உயர்வு கடந்த 5 ஆம் தேதி முடிவடைந் தது. ஜூன் 6ஆம் தேதி முதல் 7 சதம் கூலி உயர்வு அமலாகி இருக்க வேண் டும். தொழிலாளர்கள் சம்பளம், மின் சார கட்டணம் உயர்ந்து உள்ளது. ஆகையால் நடைமுறை கூலியிலிருந்து 7 சதம் கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்த னர். ஆனால், பனியன் நிறுவனங்கள் இன்னும் கூலி உயர்வை வழங்காத நிலையில், ஜூன் 24 ஆம் தேதிக்குள்  வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.