திருப்பூர், ஆக. 14 - திருப்பூர் பவர் டேபிள் உரிமை யாளர் சங்கத்தின் மகாசபை கூட் டம் லட்சுமி நகர் குலாலர் திருமண மண்டபத்தில் செவ்வயன்று நடை பெற்றது. கூலி உயர்வு ஒப்பந்தப்படி 7 சதவிகித தையல் கூலி உயர்வு தராத நிறுவனங்களில் ஆகஸ்ட் 19 முதல் உற்பத்தி நிறுத்த போராட் டம் செய்யப் போவதாக முடிவு செய் துள்ளது. இக் கூட்டத்தில், திருப்பூரில் சமீ பத்தில் திறக்கப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனையை உடனடியாக அனைத்து நவீன கருவிகளுடன், சிறப்பு மருத்துவர்கள் உடனும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்வது. மின்சார கட்டணத்தில் சிறு விசைத்தறி உரிமையாளர்க ளுக்கு அளிக்கக்கூடிய மின்சார மானியம் போல் ஜாப் ஒர்க் செய்யக் கூடிய பவர் டேபிள் உரிமையாளர் கள் அனைவருக்கும் மின்சார மானி யம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும் வருகிற ஆக 19 ஆம் தேதி முதல் 7 சதவீதம் கூலி உயர்வை அமல்படுத்தாத நிறுவ னங்களில் டெலிவரி எடுப்பதை யும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி உற்பத்தி நிறுத்தப் போராட் டம் நடத்துவது என்று மகாசபை யில் ஏக மனதாக தீர்மானிக்கப் பட்டது. திருப்பூர் பவர் டேபிள் உரிமை யாளர் சங்கத்தின் மகாசபை கூட்ட திற்கு தலைவர் ஆர்.நந்தகோபால் தலைமை தாங்கினார். இதில், செய லாளர் எஸ்.எம்.முருகேசன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். பொரு ளாளர் எஸ்.சுந்தரம் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மகாசபை யில் பங்கெடுத்தவர்களுக்கு துணைத்தலைவர் எஸ்.நாகராஜன் நன்றி கூறினார்.