சோழசிராமணியில் இன்று மின்தடை
நாமக்கல், ஜூலை 25- சோழசிராமணி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளியன்று மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், சோழ சிராமணி துணை மின் நிலையத்தில் வெள்ளியன்று (இன்று) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி. விலசு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித் துள்ளார்.
சிசுவின் பாலினத்தை கண்டறிந்த வழக்கு 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
தருமபுரி, ஜூலை 25- நல்லம்பள்ளி அருகே கருவிலுள்ள சிசு வின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், இருவர் குண்டர் சட்டத் தில் சிறையிலடைக்கப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நெக்குந்தி, முத்தப்பா நகரில் உள்ள ஒரு வீட்டில், கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக் கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேனிங் மூலம் கண்டறிந்து தெரிவிப்பதாக மாவட்ட மருத்து வர் இணை இயக்குநர் சாந்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நிகழ்விடத்துக்குச் சென்று காவல் துறையினரின் உதவியுடன் மருத்துவ துறையினர் ஆய்வு செய்ததில், சட்டவிரோதமாக சிசுவின் பாலினத்தை கண் டறியும் முயற்சியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி யைச் சேர்ந்த முருகேசன் (45), நடராஜ் (40), சின்ராஜ் (29), நெக்குந்தியைச் சோ்ந்த லலிதா (43) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். இது குறித்து பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் கனிமொழி அளித்த புகாரின்பேரில், பென்னா கரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய நபராக செயல்பட்ட முருகே சன் (45), சின்னராஜ் (29) ஆகிய இருவரையும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அளித்த பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் இரு வரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
சாலை கட்டமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு
சேலம், ஜூலை 25- வாழப்பாடி பகுதியில் ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்புப் பணிகள் குறித்து, நெடுஞ் சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு கண் காணிப்புப் பொறியாளர் சசிகுமார் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்புப் பிரி வின் கீழ், அயோத்தியாப்பட்டணம் – பேளூர் - கிளாக்காடு சாலை, தும்பல் - மாமாஞ்சி சாலை, கருமந்துறை - ஈச்சங்காடு சாலைகள், 2023 - 24 ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள் ளன. இச்சாலைப் பணிகளின் தரம் குறித்து சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியா ளர் சசிகுமார் புதனன்று நேரில் ஆய்வு செய் தார். அப்போது, பேளூர் பேரூராட்சி பகுதி யில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சாலையை அகலப்படுத்த வேண்டுமென இப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, இப்பணிக்கு நெடுஞ்சாலைத்துறை வாயி லாக திட்ட முன்வரைவு தயாரித்து அர சுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இச் சாலையில், தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள், மழைக் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பராமரிப்பு பணிகள், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து சசிகுமார் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராம ரிப்பு பிரிவு கோட்டப் பொறியாளர் துரை, வாழப்பாடி உதவி கோட்டப் பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.