நாமக்கல் மாவட்டம் என்றாலே கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை விசைத்தறி தொழில் கோலோச் சிய பகுதியாகும். பள்ளிபாளையம், குமாரபாளையம் என எந்த பகுதிக்கு நீங்கள் சென்றாலும், இரவு, பகல் எந்நே ரத்திலும் விசைத்தறிகளின் சப்தத்தை நீங்கள் கேட்கலாம். பல்லாயிரக்கணக்கான விசைத்தறிகளை நம்பி, தறி ஓட்டுப வர், பாவு ஓட்டுபவர், நூல் போடுபவர், கணக்குப்பிள்ளை, பீஸ் மடிப்பவர், அச் சுப்பினைப்போர், மேஸ்திரி, ஆசாரி, விசைத்தறி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வியாபாரிகள், ஜவுளி களை ஏற்றுமதி செய்யும் தொழிலாளர் கள், ஜவுளிகளை தரம் பிரித்து அனுப் பும் பணியாளர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் காலநிலை மாற்றத்தில், ஜவுளித்தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை, ஒன்றிய அரசின் பாராமுகம், ஜவுளி தொழிலுக்கு உரிய கவனம் செலுத்தப்படாதது, ஒன்றிய மோடி ஆட்சியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மூலப்பொருட்களின் விலை கட்டுப்பாட் டிற்குள் இல்லாதது என அடிமேல் இடி யாக விசைத்தறிகள் இயங்கும் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை யில் சராசரியான வருமானம் இருந் தாலே குடும்பத்தை சமாளிக்க முடியும் என்ற நிலை இத்தொழிலாளர்களுக்கு இருந்தது. தற்போது விண்ணை முட் டும் விலைவாசி, வீட்டு வாடகை, மின் சார கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, குழந் தைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள் பொருளா தார பாதிப்பில் தவித்து வருகிறது. தற்போதைய நிலையில், அதிநவீன ஆட்டோலூம், ஜெட்லூம் உள்ளிட்ட அதிநவீன மோட்டார் தறிகளின் பயன்பாடுஅதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் விசைத்தறி தொழில் கணிசமாக குறைந்துள்ளது இதனை சார்ந்து இயங்கிய விசைத்தறி தொழிலாளர்களின் குடும்பங்கள் இன்று, வேறுவேலையும் தெரியா மல் விக்கித்து நிற்கிsன்றனர். விரட்டும் வறுமையை எதிர்கொள்ள கந்துவட்டி உள்ளிட்டவைகளில் மாட்டி விசைத்தறியாளர்கள் குடும் பங்கள் சீரழிந்து கொண்டிருக்கிறது.
சமீப காலமாக பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதி முழுவதும் கடன் தொல்லையால் கடன் நெருக்கடியால் உயிரிழக்கும் விசைத்தறி தொழிலாளர் கள் பட்டியல் அதிகரித்துக் கொண்டுள் ளது. ஏற்கனவே பள்ளிபாளையம் என் றாலே சிறுநீரகம் விற்பனை, கரு முட்டை விற்பனை, கந்துவட்டி உள்ளிட் டவை அதிகம் நடக்கும் பகுதியாக அறியப்படுகிறது. மேலும், தற்போது, புற்றீசல் போல் புதிது புதிதாக மகளிர் சுய உதவிக் குழுக்கள், தனியார் நுண் நிதி கடன் நிறுவனங்கள் அதிகளவு முளைக்க துவங்கி உள்ளது. வாங்கிய கடனை அடைக்க, போதுமான கூலி கிடைக்கபெறாத நிலையில், மாதந்தோ றும் அல்லது வாரந்தோறும் தொகை செலுத்த மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக தனியார் நுண்நிதி நிறுவனங்க ளில் கடன் பெருகின்றனர். அவ்வப் போது விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை விடப்படுவதால், நிரந்தர வருமானம் பெற்று வந்த தொழிலா ளர்கள் வருவாய் இழப்பை சந்திக்கின் றனர். இதனால் கூடுதலாக பல்வேறு இடங்களில் விசைத்தறி தொழிலாளர் கள் கடன் பெறுகின்றனர். சில நேரங்க ளில் கடன் தொகை செலுத்த போதிய தொகை இல்லை என்கிறபோது, மகளிர் சுய உதவி குழுக்கள், நுண்நிதி நிறுவ னங்களில் தங்களுக்கு தெரிந்த நபர் களை பயன்படுத்தி, அவர்கள் மூலமாக கடன் பெறுகின்றனர்.
கடன் மேல் கடன் வாங்குவதால் குடும்பத்தில் கணவன் மனைவியி டையே சண்டைகளும், பிரச்சனை களும் உருவாகிறது. கடன் கொடுத்த வர்களும் கடனை திருப்பி கேட்டு நெருக் குவதால், கடனை கட்ட முடியாத விசைத்தறி தொழிலாளர்கள் இர வோடு இரவாக குடும்பத்தோடு ஊரை விட்டு தலைமறைவாவது, அல்லது மனம் உடைந்து தற்கொலை செய்வது போன்ற செயல்கள் சமீப காலமாக நாமக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. கடன் தொகையாக சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வழங் கப்படுகிறது. முறையாக பணம் செலுத்தி வரும் பெண்கள், தங்கள் கண வர் வேலை செய்யும் விசைத்தறி கூடம் விடுமுறை விடப்பட்டாலோ, உடல் நலக்குறைவால் விடுமுறை எடுத்துக் கொண்டாலோ, நிதி நெருக் கடிக்கு ஆளாகின்றனர். இதன் காரண மாக அருகில் உள்ள கந்துவட்டி பைனான்ஸ் அல்லது வட்டித்தொகை எவ்வளவு அதிகம் இருந்தாலும் பரவா யில்லை, உடனடியாக யார் கடன் தருவார்களோ அவர்களின் வலையில் சிக்குகின்றனர்.
நெருப்பை ஒளி என நினைத்து விட் டில் பூச்சிகளாய் விழுகின்றனர் விசைத் தறி தொழிலாளர்களின் குடும்பங்கள். கடன் அதிகரிக்கும் பொழுது வேறு வழி இன்றி தற்கொலை போன்ற தவறான பாதையை தேர்ந்தெடுத்து தங்களை மாய்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் கூட பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி என்ற பகுதியில் சுஜாதா என்ற பெண் நிதி நிறுவனத்தின் நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இதுபோல கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்து எண்ணற்ற சம்பவங்களை அடுக்க முடியும். ஜவுளி தொழில் மீது ஆட்சியாளர் கள் உரிய கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது நேரடியாகவும் மறை முகமாகவும் லட்சக்கணக்கான தொழி லாளர்களைக் கொண்ட தொழில் என்ப தாலும், இந்தியாவின் பொருளாதா ரத்தை தீர்மானிக்க கூடியதாகவும் இருப்பதால் இதற்கான முன் கட்டமைப் புகளை முறையாக ஏற்படுத்த வேண் டும். விசைத்தறி தொழிலாளர்கள் அதி கம் வசிக்கும் பகுதிகளில் அரசு சார்பில் சிறப்புக் குழு அமைத்து, விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு கள், ஏன் கடன் பெறுகிறார்கள், அவர் கள் வாழ்வாதாரத்திற்கு என்ன மாதி ரியான தேவைகள் உள்ளது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, இதற்கு என்ன தீர்வு என்பதை அரசு யோசிக்க வேண் டும்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் படைவீடு பெருமாள் கூறும் பொழுது, விசைத்தறித்தொழில் தற் போது கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனை நம்பிய தொழிலா ளர்கள் கடன் வலையில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவிக்கின்ற னர். பொதுவாக மைக்ரோ பைனான்ஸ், கந்துவட்டி கும்பல்கள் ரிசர்வ் வங்கி யின் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்கிறது. ஊருக்குள் நுழைந்து, கந்து கொடுப்பதும், கூடுதல் வட்டி வசூ லிப்பதும் மக்களை அடுத்தடுத்த குழுக் களில் கடன் வாங்கும் சூழ்நிலையை உருவாக்குறிது. கடனை கட்ட முடி யாத சூழலுக்கும் இவர்களே உருவாக் குகின்றனர். இதுவே தொழிலாளர்க ளின் தற்கொலைக்கு காரணமாக இருக்கிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தி, தேசி யமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தாராளமாக சுழல் நிதி மூலமாக கடன் வழங்க வேண்டும். குறைந்த வட்டி யில் கடன் வழங்கினால், இவர்கள் மீண்டும் மைக்ரோ பைனான்ஸ் பக்கம் போகாமல் தடுக்க முடியும். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வட்டார அளவில் குழுக்கள் அமைத்து, வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு, விசைத்தறி தொழிலாளர் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் சட்ட ரீதியான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றார். மனிதனின் நிர்வாணத்தை மறைத்து, ஆடை கொடுத்து மானத் தைக் காக்கும் விசைத்தறி தொழிலாளர் களின் நிலையை ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. -எம். பிரபாகரன்