districts

img

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த மின்வாரிய ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஏப்.7- பழைய பென்சன் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும் என மின்வாரிய ஓய்வூதி யர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சிறப்பு பேரவை கூட்டம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட் டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சங் கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் எம்.சின்னசாமி வரவேற்றார். இக்கூட் டத்தில், முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஓய்வூதி யர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சரத்தை நீக்கி, ஓய்வூதியர்களுக்கு பாதுகாப்பு ஏற்ப டுத்தும் வகையில் சரத்தை இணைக்க வேண் டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து  செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் பணிகாலத்தை ஓய்வூதியத்திற்குள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத் தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எம். பாலசுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் ஜி.பி. விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.