districts

img

விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கண்ணீர்:

திருப்பூர், ஏப்.7- வெங்காய விலை வீழ்ச்சி அடைந் ததால் இழப்பை சந்தித்த விவசாயி கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெங்கா யத்தை தரையில் கொட்டி ஒப்பாரி போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் கோவை, திருப் பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல்,  தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்களில் வெங் காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்படும் வெங்காயத்திற்கு தற்பொழுது உரிய விலை கிடைக்காமல் விவசா யிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகி உள்ளது. தற்போதைய சூழ லில் வெங்காயம் கிலோ 8 ரூபாய் விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வரு கின்றனர். இதனால் விவசாயிக ளுக்கு கடன் சுமை அதிகரித்து வரு கிறது. மேலும் சாகுபடிக்கு தேவை யான விதை, உரம் போன்ற இடு பொருட்களின் விலை அதிகரித்துள் ளதால் விவசாயிகள் பெரும் சிர மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  எனவே, சிவசுப்பிரமணியம் கமிட் டியின் அறிக்கையின்படி விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங் காய விலை உச்சத்தில் இருந்த போது ஒன்றிய அரசு வெங்கா யத்தை இறக்குமதி செய்ய அனு மதி அளித்தது. அதேபோல், வெங் காய விலை தற்போது வீழ்ச்சி அடைந் துள்ள நிலையில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.  அதே போல், மாநில அரசு வெங்காயத்தை கூட்டுறவுத்துறை மூலம் குறைந்த பட்ச விலையாக ரூபாய் 40க்கு கொள் முதல் செய்ய வேண்டும் என வலியு றுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வெங்காயத்தை கொட்டி ஒப்பாரி வைத்தனர்.