திருப்பூர், டிச. 20 - பொங்குபாளையம் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை சாலையில் கொட்டுவது குறித்து செய்திதாள்களில் செய்தி கள் வெளியாகியும், தொடர்ந்து குப்பைகளை கொட்டுகி றார்கள் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பொங்குபாளையம் ஊராட்சி, தேசிய நெடுஞ்சாலையை சந்திக்கும் பொங்குபாளையம் சாலையில் கொட்டப்பட்டு இருக்கும் குப்பைகளால் நோய் தொற்று ஏற்ப டும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை அடைந் துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது, பொங்கு பாளையம் சுற்றுவட்டாரத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் கொண்டு வந்து இங்கு கொட்டி விடுகிறார்கள். இது குறித்து செய்திதாள்களில் செய்திகள் வந் துள்ளது, தொலைபேசி மூலம் ஊராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் இந்த சாலையை பயன்ப டுத்துகிறார்கள். இங்கு கொட்டப்படும் கோழி இறகுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றதால் விரைவில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் காலை நேரங்க ளில் அருகாமையில் உள்ள பகுதிகளிலிருந்து புதிய திருப்பூ ருக்கு வேலைக்கு செல்பவர்களும் இந்த சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். சாலையை மறைக்கும் அளவிற்கு குப்பைகள் இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள் ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் இங்கு குப்பைகள் கொட்டு வதை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித் தனர்.