districts

img

தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்க பொங்கல் விழா

கோவை, ஜன.6- பொங்கல் விழாவை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களை ஊக்கு விக்கும் விதமாக சூலூர் பேரூராட்சி  சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை மாவட்டம், சூலூர் பேரூ ராட்சியில் பணியாற்றி வரும் தூய் மைப் பணியாளர்களை ஊக்குவிக் கும் வகையில் கடந்த இரண்டு ஆண் டுகளாக பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகி றது. அந்த வகையில் இந்த ஆண்டு  நடைபெற்ற பொங்கல் விழா விளை யாட்டு போட்டியில் உறியடித்தல், பலூன் உடைத்தல், லக்கி கார்னர், ஸ்லோ சைக்கிள், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட் டியில் பங்பெற்ற தூய்மைப் பணியா ளர்களுக்கு நினைவு பரிசுகளுடன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த விளையாட்டு போட்டியை பேரூராட்சிகளின் உதவி இயக்கு னர் துவாரகநாத் சிங், மற்றும் பேரூ ராட்சி தலைவர் தேவி மன்னவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  பேரூ ராட்சிகளின் உதவி இயக்குனர் பணி யாளர்களுடன் சேர்ந்து போட்டிக ளில் பங்கேற்றது தூய்மைப் பணி யாளர்களை உற்சாகப்படுத்தும் வித மாக இருந்தது. போட்டியின் முடி வில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பெண் கவுன்சி லர்கள், படுகர் இன பாடலுக்கும், கும்மி பாட்டுக்கும் ஒரு சேர நடன மாடியது காண்போரை கவரும் வித மாக இருந்தது. இதைத்தொடர்ந்து, பேரூராட்சி களின் உதவி இயக்குனர் துவார கநாத் சிங் செய்தியாளர்களிடம் பேசு கையில், கடந்த ஆண்டு தூய்மைப்  பணியாளர்களை ஊக்குவிப்பதற் காக நடத்தப்பட்ட இந்த பொங்கல் விழா போட்டிகள் இந்த ஆண்டும் நடத்தப்பட்டது, வரவேற்பு அளிக் கக் கூடியதாக உள்ளது. மேலும்  தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியா ளர்களின் மன இறுக்கத்தைப் போக்க  இந்த விளையாட்டுப் போட்டிகள் உதவும். ஆண்டுதோறும் இது போன்ற போட்டிகள் தொடர்ந்து நடத் தப்பட வேண்டும் என தெரிவித்தார்.