districts

img

ஏரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

ஏரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நாமக்கல், ஜூன் 20- நாமக்கல் அருகே உள்ள  தூசூர் ஏரியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம், கொல் லிமலையில் பெய்யும் மழைநீர், காட்டாற்று வெள்ளமாக மாறி, பழையபாளையம் ஏரி நிரம்பி, தூசூர் ஏரிக்கு நீர் செல்லும் வகையில் நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகள் வரை போதிய மழை இல்லாமல் ஏரி வறண்டு காணப்பட்டது. கடந்தாண்டு கொல்லிமலையில் பெய்த கனமழையால் ஏரிக்கு தண்ணீர் வந்த நிலையில், இந்த நீரை பயன்படுத்தி அங்குள்ள விவசாயிகள் நெல் நடவு  பணிகளை மேற்கொண்டனர். ஆனால், நெல் வயல்களில் ஏரி தண்ணீருடன் நகராட்சி கழிவுநீரும் கலந்து வந்ததால், ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றார். இந் நிலையில், ஏரியில் கலக்கும் தண்ணீரை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரகுநாதன் தலைமையில், ஆட் சியரின் நேர்முக உதவியாளர், ஊராட்சி உதவி இயக்கு நர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக் குழுவினர் தூசூர் ஏரி பகுதியில் சுமார் 8 இடங்களில் ஆய்வு  மேற்கொண்டு, நீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவு வந்தபிறகு, உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.