districts

img

தனியார் கட்டடங்களில் வாக்குச்சாவடி

ஈரோடு, ஆக. 29- தனியார் கட்டடங்களில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக் கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும்,  மாவட்ட ஆட்சிருமான ராஜ கோபால் சுன்கரா வியாழனன்று  தெரி வித்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசா கர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல்  படி 19 லட்சத்து 66 ஆயிரத்து 496 வாக்காளர்கள் உள் ளனர். 8 தொகுதிகளிலும்  956 வாக்குச்சாவடி அமைவிடங்க ளில் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. தற்போது புதிய வாக்குச்சாவடி நிலையங்கள் உருவாக்கு தல், வாக்குச்சாவடியை இடம் மாற்றம் செய்தல், வேறு கட்ட டத்திற்கு மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், பகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  இப்பணியின் போது, ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-க்கு மிகையாக இருப் பின் அந்த வாக்குச்சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 2 கி.மீ.க்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் புதிய வாக்குச்சாவடி அமைக்கப்படும். பழுதடைந்த நிலையில் உள்ள வாக்குச்சாவடிகள் கண்டறிதல், வாக்குச்சாவடி அமை விடம், கட்டட இடம் மாற்றம், பெயர் மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். நகர்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள பகுதி களில் தனியார் கட்டடங்களில் தகுதியின் அடிப்படையில் புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.