நாமக்கல், ஏப்.2- வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட் பட்ட பகுதியிலுள்ள கோழிப்பண் ணைகளில் பணியாற்றும் தொழிலா ளர்களிடம் நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். நாமக்கல் மக்களவை தொகுதி யில் போட்டியிடும் இந்தியா கூட்டணி யின் கொமதேக வேட்பாளர் மாதேஸ் வரன் வெண்ணந்தூர் ஒன்றியப் பகு திகளிலுள்ள கோழிப்பண்ணைக ளில் தொழிலாளர்களோடு இணைந்து தனது கைப்பட முட்டை களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, உதயசூரியன் சின்னத்தில் வாக்க ளிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். அவருடன் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., வெண்ணந்தூர் ஒன்றிய திமுக செய லாளர் எம்.துரைசாமி உள்ளிட்ட பல ரும் கலந்து கொண்டனர். அப்போது ராஜேஷ்குமார் எம்.பி., பேசுகையில், நாமக்கல் மாவட் டத்தில் தினந்தோறும் 7.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டை உற்பத்தி, கோழி இறைச்சி உள்ளிட்ட பணிகளில் சுமார் 5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந் தியா மற்றும் வெளிநாடுகளுக்கு தினந்தோறும் ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது. தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஏற் றுமதிக்கு ஏற்றுமதி மையம் அமைக் கப்படும் என கூறியிருப்பது ஒரு வரப் பிரசாதமாகும். ஒன்றிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகம், கோழிகளை விலங்குவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அப் போது, வரக்கூடாது என நேர மில்லா நேரத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்கு ஒன்றிய அமைச் சர், கோழிகள் விலங்குவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட மாட் டாது என்ற உறுதிமொழியை அளித் தார். கோழிகள் பாதுகாப்பான முறை யில், சத்தான, கலப்படம் இல்லா மல் வளர்க்கப்பட்டு வருகிறது, என் றார்.