districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரஷ்ய நாட்டினர் குறித்து தகவல் தெரிவிக்காத விடுதி நிர்வாகத்தினருக்கு போலீசார் எச்சரிக்கை

உதகை, ஆக.18- உதகையில் சூர்யா படபிடிப்புக்காக சுற்றுலா விசாவில்  வந்து, விடுதியில் தங்கிய ரஷ்ய நாட்டினர் குறித்து தகவல்  தெரிவிக்காத விடுதி நிர்வாகத்தினருக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ‘நவாநகர் பேலஸ்’  என்ற இடத்தில் நடிகர் சூர்யா நடித்த தமிழ் படம் ஒன்றின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இப்பட பிடிப்பிற் காக ரஷ்யாவைச் சேர்ந்த 155 பேர் கடந்த மாதம் ஜூலை 27  ஆம் தேதியன்று சுற்றுலா விசாவை பெற்று வந்துள்ளனர்.  அவர்கள், உதகையில் உள்ள, 3 தனியார் ஓட்டல்களில்  தங்கி பட பிடிப்பிற்கு சென்று வந்தனர். பொதுவாக வெளி நாட்டை சேர்ந்தவர்கள் உதகையில் வந்து தங்கினால் தங் கும் விடுதி நிர்வாகத்தினர் இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல்  நிலையத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தி லும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், ரஷ்ய நாட்டினர்  குறித்த விபரங்களை விடுதி நிர்வாகத்தினர் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர். ரஷ்யா நாட்டினர் தங்கி இருந்தது குறித்து காவல் துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து,  கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில், தனிப்பிரிவு ஆய் வாளர் சுஜாதா தலைமையில் காவல் துறையினர் அனுப்பி  ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், உதகை யில் ஹில்பங்க் பகுதியில் உள்ள விடுதியில் வெல்பேக் ரெசி டென்சி, ரயில் நிலையம் அருகே உள்ள விடுதி சபையர் கார் டன் வியூ ஆகிய விடுதிகளில் தங்கிய, 155 பேரில், 42 பேர்  கடந்த வாரம் ரஷ்ய திரும்பிய நிலையில், 113 பேர் அங்கு தங்கி  இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பின், விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்கி எச்சரித்தோம். பின், அங்கு தங்கி  இருந்த ரஷ்ய நாட்டினர் அனைவரையும் வெள்ளியன்று வெளியேற்றினோம். இனி, வரும் நாட்களில் வெளி நாட்டி னர் உதகையில் தங்குவது குறித்து விடுதி நிர்வாகத்தினர் சம் மந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும், என்றனர்.

பெண்ணை கடித்த வளர்ப்பு நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

கோவை, ஆக.18- பெண்ணை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், ஆர்.வி.நகரைச் சேர்ந்த அருண் என்பவரின் மனைவி சிந்து.  இவர் பார்வையற்ற அவரது தாயார் பிரேமா வசிக்கும் காந்திபு ரம் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்பின் டாக்டர் ராஜேந்திர பிர சாத் சாலையில் சிந்து, பேருந்து நிலையத்துக்கு நடந்து  சென்றுக் கொண்டிருந்தார். அதேபகுதியைச் சேர்ந்த ஐசக்  பாபு தனது வளர்ப்பு நாயுடன் சாலையில் சென்றுக் கொண்டி ருந்தார். அப்பொழுது திடீரென அந்த நாய் சிந்துவை கடிக்கத்  தொடங்கியது. இதில் அவரது வலது கையில் பலத்த காயம்  ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அனு மதித்தனர். இதன்பின் வீட்டிற்கு திரும்பிய அவர் நடந்த சம்ப வம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, நீல கிரி மாவட்டம், குன்னூருக்கு அழைத்துச் சென்று அங்கு நாய்  கடிக்கு தடுப்பூசி போட்டு உள்ளார். இதற்கிடையே நாய் கடித்து காயமடைந்த பெண்ணின் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து ரத்தினபுரி காவல் துறையினர் பாதிக்கப்பட்ட சிந்துவின் புகாரை பெற்று  ஐசக் பாபு மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

பெண்ணை கத்தியால் தாக்கியவர் கைது

தருமபுரி, ஆக.18- குமாரசாமிபேட்டை கோவிலில் சுத்தம் செய்யும் பணியில்  ஈடுபட்டிருந்த பெண்ணை, கத்தியால் தாக்கிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி நகரம், குமாரசாமிபேட்டையில் இந்து அறநிலை  துறைக்கு சொந்தமான ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோ யில் மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன.  இந்நிலையில், சனியன்று காலை வழக்கம் போல் கோயில்  நடை திறந்து ஊழியர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த னர். ஸ்ரீதுர்க்கை அம்மன் கோவிலில் ராஜேஸ்வரி (55) என்ப வர் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, காவலர்கள் அணி யும் காக்கிச்சட்டை அணிந்த இளைஞர் பெரிய கத்தியுடன் கோவிலுக்குள் நுழைந்து, ராஜேஸ்வரியை 13 இடங்களில் வெட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை அந்த இளைஞர் கத்தியை காட்டி அனைவரையும் துரத்தி உள் ளார். மேலும், கூட்டமாக வந்த பொதுமக்களை பார்த்து திடீ ரென ஓடிய அந்த இளைஞர் கோயிலில் கருவறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். இதனிடையே, ரத்த  வெள்ளத்தில் கீழே விழுந்த ராஜேஸ்வரியை அங்கிருந்த வர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி நகரக் காவல்  துறையினர், இளைஞரை கைது செய்து, விசாரணை மேற் கொண்டனர். அதில் அவர், தூத்துக்குடி மாவட்டம், திருச் செந்தூரைச் சேர்ந்த சித்தி விக்னேஷ் (25) என்பது தெரிய  வந்தது. இவர் எதற்காக கோவிலுக்குள் சென்று மூதாட்டியை  வெட்டியுள்ளார் என்பது குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்கம்பிகளை சீரமைக்கும் பணி தீவிரம்

உதகை, ஆக.18- கோத்தகிரி பகுதியில் மின் கம்பி உரசி அரசு பேருந்து ஓட்டு நர் உயிரிழந்த நிலையில், அபாயகரமாக உள்ள மின்கம்பம்  மற்றும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர் கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அரசுப்பேருந்து ஓட்டுநர் பிரதாப், தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் பேருந்து  உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் அபாயகரமாக உள்ள மின்  கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்கவும். மின்கம்பங் கள் மீது சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் அடர்ந்த செடி கொடி களை அகற்றவும் மின்வாரியத்துக்கு தமிழக அரசு உத்தர விட்டது. அதன்பேரில், குன்னூர் கோட்டாட்சியர் சதீஷ்  தலைமையிலான அதிகாரிகள் சாலையோரம் இருக்கக்கூ டிய அபாயகரமான மின்கம்பங்களை சனியன்று சீரமைக் கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலையோ ரத்தில் இருக்கும் ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்ப டுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், மின்  ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளிலும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை அகற்றம்

உதகை, ஆக.18- பிதர்க்காடு அருகே வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை அகற்றப்பட் டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், பிதர்க்காடு வனச்சர கத்திலுள்ள பாட்டவயல் காப்புக்காட்டில் தனிநபர் ஒருவர்  நிலத்தை ஆக்கிரமித்து கடை அமைத்திருந்தார். இந்நிலை யில், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் கருப்பையா தலைமையில் வரு வாய்த் துறையினர், மின்வாரியத் துறையினர் முன்னிலை யில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடையை சனியன்று வனத் துறையினர் அகற்றினர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்கம் தேங்காய் உடைத்து போராட்டக்குழு மகிழ்ச்சி

அவிநாசி, ஆக.18- அவிநாசி அருகே அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட் டக்குழுவினர், தேங்காய் உடைத்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் சனியன்று காணொலி மூலம் துவங்கி வைத் தார். இத்திட்டம் நிறைவேற உண்ணாநிலை உள்ளிட்ட பல் வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், அவிநாசி, தாமரைக்குளம் பகுதியில் இத்திட்டத்தின் போராட்டக்குழுவினர் தேங்காய் உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், விடுபட்ட குளம் குட் டைகளை சேர்க்க வேண்டும். அத்திக்கடவு நீர் வருகின்ற  குளம், குட்டைகளை அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி நிர்வாகத் தினர் குளத்தை பாதுகாத்து, கழிவுநீர் குளத்தில் கலக்காத வாறு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

போலி அமெரிக்க டாலரைக் கொடுத்து மோசடி நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபர் கைது

ஈரோடு, ஆக.18- போலியான அமெரிக்க டாலரைக் கொடுத்து மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபரை காவல் துறை யினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் பயணத் தொழிலும் (டிராவல்ஸ்), வெளி நாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்கள்  நாட்டு பணத்திற்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை மாற்றித்  தரும் பணியையும் செய்து வருகிறார். இந்நிலையில், நைஜீ ரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு என்பவர், அசோக் குமாரை அணுகி தான் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தங்கி ஜவுளி தொழில் செய்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக 500 அமெரிக்க டாலருக்கு மாற்றாக, இந்திய  ரூபாய்களை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இத னைத்தொடர்ந்து, ஈரோடு வந்த நைஜீரிய நபர், அசோக்குமாரி டம் 500 அமெரிக்க டாலரைக் கொடுத்து விட்டு, அதற்கு மாற் றாக, இந்திய மதிப்பில் ரூ.48 ஆயிரம் பெற்றுள்ளார். நைஜீ ரியா நபர் கொடுத்த டாலரை, அசோக்குமார் ஆய்வு செய்த  போது, அது போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு காவல் கண்காணிப்பாளரிடம் அசோக்குமார் புகாரளித்தார். அதன்பேரில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு விடம் சனியன்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண் டனர். இதில், அவர் போலி டாலர் கொடுத்து மோசடி செய்தது உறுதியானது. மேலும், கோவை மாவட்டம், காட்டூர் பகுதி யில், இதே போல் போலி கரன்ஸி கொடுத்து மோசடி செய்தது  தொடர்பாக, இவர் மீது ஒரு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை காவல் துறையினர் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓமலூர் கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளம்

சேலம், ஆக.18- ஓமலூர் அருகே உள்ள கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தால், 3க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக் கிடையேயான போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்தை யொட்டி சேர்வராயன் மலைத்தொடர் உள் ளது. இந்த மலைப்பகுதியில் கிழக்கு சர பங்கா ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு  சர்க்கரை செட்டிப்பட்டி, நாலுகால்பாலம் வழி யாக காமலாபுரம் ஏரிக்கு வந்தடைகிறது. தொடர்ந்து ஓமலூர், தாரமங்கலம் எடப்பாடி, பூலாம்பட்டி வழியாகச் சென்று காவிரி ஆற் றில் கலக்கிறது. இந்நிலையில், வெள்ளி யன்று இரவு சேர்வராயன் மலைத்தொடர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சக்கரசெட்டிப்பட்டி வனப் பகுதியில், வனத்துறையினர், விவசாயிகள் ஏற்படுத்திய ஏரியை நிரப்பிக் கொண்டு, காம லாபுரம் ஏரிக்கு தண்ணீா் வந்து கொண்டுள் ளது. ஒரு நாள் இரவில் பெய்த மழைக்கு ஆற்றில் பெருக்கெடுத்த மழைநீரால் சர்க் கரை செட்டியப்பட்டி, தொப்ளாங்காடு உள் ளிட்ட 3க்கும் மேற்பட்ட குக்கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தொப்புளங்காடு உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளப்பெருக்கில் பெரிய அளவி லான மரங்கள் அடித்து வரப்பட்டு பாலத்தில்  தேங்கியுள்ளன. இதனால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாலுகால்பாலம் பகுதியில் நான்கு பாலங்க ளையும் அடைத்துக் கொண்டு தண்ணீர் செல் வதால், அங்கும் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட குப்பைகள் தார் சாலையில் தேங்கிக் கிடக்கின்றன. இதனை  அப்பகுதி மக்கள் டிராக்டர் வாகனம் வைத்து  அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்தை சீரமைக்கும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

ஒகேனக்கலில் பரிசல் இயக்க மீண்டும் அனுமதி

தருமபுரி, ஆக.18- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க சனியன்று தடை விதித்திருந்த மாவட்ட நிர்வாகம், மீண்டும் பரிசல் இயக்க ஞாயிறன்று அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தல மாக விளங்கும் ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் தமி ழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தி ருக்கும். ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணி களில் பெரும்பாலானோர் காவிரி ஆற்றில் பரி சல் பயணம் மேற்கொள்வதை வாடிக்கை யாகக் கொண்டுள்ளனர். சுற்றுலாப் பயணி கள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற் கொள்வதற்காக ஊட்டமலை பரிசல் துறை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, சின்னாறு பரி சல் துறை உள்ளிட்ட பரிசல் துறைகளில் நீர் வரத்தின் அளவை பொருத்து மாவட்ட நிர்வா கத்தின் அனுமதியோடு பரிசல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சனியன்று திடீரென நீர்வரத்து விநா டிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த தால் பரிசல் இயக்க தடை விதித்த மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை காலை நீர்வ ரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் மீண்டும் பரிசல் இயக்க அனுமதி அளித்துள்ளது. இருந்தபோதிலும் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, ஞாயிறன்று சின்னாறு பரிசல் துறை வெறிச் சோடி காணப்பட்டது.

மனநலம் காப்பகத்தில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல், ஆக.18- ராசிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார்  மனநலக் காப்பகத்தில் இருவருக்கி டையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் உயிரி ழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதி யில் காட்டூர் என்ற பகுதியில் “அனைக்கும் கரங் கள்” என்ற பெயரில் மனநலம் பாதிக்கப்பட்டு ருக்கான மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அரசு அனுமதியுடன் செயல்பட்டு  வரும் இந்த மறுவாழ்வு மையத்தில், சிறு வர்கள் முதல் முதியவர்கள் வரை என 70க்கும்  மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்க  வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்ற னர். ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த தங்கராஜ் (60) என்பவர், கடந்த 5  ஆண்டுகளாக இந்த இல்லத்தில் தங்கியுள் ளார். இதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கைரூல் ஆஸ்மி (35) என்பவரும் தங்கியுள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை இருவரிடையே மோதல் ஏற்பட் டது. அப்போது கைரூல் ஆஸ்மி, அங்கிருந்த கட்டையால் தங்கராஜை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலமாக தாக்கப்பட்டதில் தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத் திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த  தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  ராசிபுரம் காவல் துறையினர் உயிரிழந்த தங்க ராஜ் உடல் பிரோத பரிசோதனைக்காக ராசி புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.