districts

img

பழங்குடியினர் நிலம் அபகரிப்பு: துணைபோகும் காவல் அதிகாரிகள்

தருமபுரி, ஏப்.24- பழங்குடியினரின் நிலத்தை அபக ரிக்க முயற்சி செய்பவர்களுக்கு துணை நிற்கும் கோட்டப்பட்டி காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்தி ருப்பதாவது: தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், சிட்டிங் ஊராட்சி நமங்காடு மலை கிரா மத்தைச் சேர்ந்த, கனியன் என்பவரின் மகன் கள் வெங்கட்டின், லட்சுமணன், ராமசாமி,  சின்னசாமி, ராமன், ஜடையன் ஆகிய 6 பேரும்  கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நமங்காடு கிராம பட்டா  எண்: 152, சர்வே எண்: 20/2,ல் 4.32 ஏக்கர் உள் ளது. இந்த பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி  சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேற்று  சமூகத்தை சேர்ந்த கதிரவன், கோவிந்தராஜ்,  அமிர்தம் ஆகிய மூன்று பேரும் டிராக்டர்  வைத்து பழங்குடியினரின் நிலத்தை உழுதுள் ளனர். இதனை கண்ட பழங்குடியினர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஆக்கிர மிப்பாளர்கள் கோட்டப்பட்டி காவல் நிலை யத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பாவி பழங்குடி மக்கள் மீது பொய் வழக்கு தொடுத்து, காவல் துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை அதிர்ச் சியை ஏற்படுத்தியது. பழங்குடியினரின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் வேற்று சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கா மல், பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு எதி ராக கோட்டப்பட்டி, காவல் ஆய்வாளர் ,காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, ஒருதலைப்பட்சமாக செயல்ப டும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை  எடுக்க வேண்டும். பழங்குடி மக்களின்  நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மாவட்ட செயலா ளர் கே.என்.மல்லையன் மற்றும் பாதிக்கப் பட்ட பழங்குடி மக்களுடன் மனு அளித்தார்.