districts

img

சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை

சேலம், ஜன.19- சேலம் மாநகர் பகுதிகளில் சட்டவிரோத மாக மதுபானங்கள் உள்ளிட்ட போதைப்  பொருட்கள் விற்பனையை காவல் துறையி னர் வேடிக்கை பார்ப்பதாகக்கூறி இந்நிய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் பகுதிகளில் முறைகேடாக மது மற்றும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் பலமுறை காவல் துறையில் புகார் அளித்தும் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த  சில தினங்களுக்கு முன்பு முறைகேடாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறு வதை சுட்டிக்காட்டும் விதமாக வீடியோ எடுக் கப்பட்டபோது,

சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர், “அமைச் சர் வரை கமிசன் தொகை செல்கிறது” என கூறி யிருந்தார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதையடுத்து அந்த தலைமை காவலரை ஆயுதப்படைக்கு பணி யிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், முறைகேடாக மதுபானங் கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்காமல், அமைச்சர் வரை கமிசன் போகிறது எனக்கூறிய காவலர் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர் முழு வதும் நடைபெறும் சட்டவிரோதமான மது மற் றும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட் கள் விற்பனை செய்பவர்களுக்கு உடந்தை யாக செயல்படும் காவல் துறையினரை கண் டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் வெள்ளியன்று நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய வாலிபர் சங்கத்தினர், தங்களது கண்க ளில் கருப்புத்துணியால் கட்டிக்கொண்டு, மிக் சர் சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் வாலிபர் சங்க கிழக்கு மாநகர தலைவர் கோபிராஜ், மாநகரக்குழு உறுப்பினர்கள் தேவி, வீரமணி, தமிழரசன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதைத்தொடர்ந்து இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் சேலம் தலைமை தபால் நிலையத்தில் தமிழ் நாடு காவல் துறை இயக்குநருக்கு மனு அனுப்பினர்.