கோவை, நவ.9- இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், தொடர்புடைய குண் டர்களை கைது செய்யக்கோரி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட முயன்ற வாலி பர், மாணவர் சங்கத்தினரை போலீ சார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே லட்சுமி நாயக்கன்பாளை யம் பகுதியில் ஸ்ரீ ராமசாமி நாயுடு வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகி றது. இந்த பள்ளியில் ஆசிரியர்க ளால் மாணவர்கள் தொடர்ந்து தாக் கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து விளக்கம் பெற இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வெள்ளியன்று மாலை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்பிகாவை நேரில் சந் தித்து பேசியுள்ளனர். அப்போது, தலைமை ஆசிரியர் அகங்காரத் தோடு பேசியதாக தெரிகிறது. இத னையடுத்து, பள்ளியில் இருந்து வெளியே வந்து, அரசு பேருந்தில் ஏறி திரும்பியுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குட்டி, ரமேஷ், ராமசாமி ஆகிய மூவர் பேருந்தை வழிமறித்து, மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை கீழே இறக்கி மத மற்றும் சாதிய மோதலை ஏற்ப டுத்தும் வகையில் தகாத வார்த்தை களால் திட்டியதுடன், கடுமையாக தாக்கினர். இவர்கள் மூவரும் பாஜ கவைச் சேர்ந்தவர்கள் எனவும், தலைமை ஆசிரியரின் தூண்டுதல் காரணமாகவே இத்தகைய தாக்கு தல் நடத்தப்பட்டதாக கூறப்படுகி றது. இந்த சம்பவத்தில் மாணவர் சங்க நிர்வாகி ரங்கசாமி என்பவர் காயம் அடைந்தார். இதனைய டுத்து, காயமடைந்த மாணவர் சங்க நிர்வாகி ரங்கசாமி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்த வீடியோ மற்றும் ஆடியோ ஆவணங்கள் சமூக வலைத்தளங் களில் வெளியானது. இதனைய டுத்து, சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், லட்சுமி நாயக்கன் பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயனிடம் மனு அளித்தனர். இத னைத்தொடர்ந்து, லட்சுமி நாயக் கன்பாளையம் பகுதியில் ஆர்ப் பாட்டம் செய்வதற்காக திரண்ட மாணவர், வாலிபர் சங்கத்தினர் உள் ளிட்ட 75க்கும் மேற்பட்டவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் வாலி பர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ்ராஜா உள்ளிட்டோரை கைது செய்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய் வேந்திரன், சூலூர் ஒன்றியச் செய லாளர் ஏ.சந்திரன் உள்ளிட்ட நிர்வா கிகள் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஸ்ரீராமசாமி நாயுடு வித்யாலயா பள்ளியில் தொடர்ந்து மாணவர் களை துண்புறுத்தப்படுவது தொடர் கிற நிலையில், இதுகுறித்து விசா ரிக்க சென்ற மாணவர், வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது குண்டர் களை ஏவி விட்டு தாக்குதல் நடத் திய பள்ளி நிர்வாகத்தின் மீதும், தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண் டும் எனவும், காலதாமதப்படுத்தி னால் தொடர் போராட்டத்தை முன் னெடுக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.