41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்ப டுத்த வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் எடப்பாடி கோட்டப் பொறியாளர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் து.சிங்கராயன், செயலாளர் தா. கலைவாணன் அந்தோணி, பொருளாளர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்சோ வழக்கு - 20 ஆண்டுகள் சிறை
நாமக்கல், ஜூன் 12- ராசிபுரம் அருகே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கிராமத்திலுள்ள வீட்டில் தனியாக இருந்த இரு சகோதரிகளை 12 பேர் பாலி யல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின்பேரில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்.11 ஆம் தேதியன்று 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஏற்கெனவே சிலருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்த நிலை யில், கோகுல கண்ணன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி டி.முனுசாமி செவ்வாயன்று தீர்ப்பளித்தார்.
பேருந்து மோதி ஓட்டுநர் உயிரிழப்பு
தருமபுரி, ஜூன் 12- தருமபுரி அருகே சாலையை கடக்க முயன்ற ஓட்டுநர், தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அருகே உள்ள மான்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (36). ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று தனது மகன் ராகுலுடன் (7) பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சோலைக்கொட்டாய் பகுதிக்கு சென்றார். அங்கு, அவர் மகனுடன் சாலையைக் கடக்க முயன்றபோது, பொம்மிடி யில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்ன சாமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரு டைய மகன் ராகுல் காயங்களுடன் மீட்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து மதிகோண் பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பருத்தி ஏலம்
நாமக்கல், ஜூன் 12- நாமக்கல் வேளாண் கூட் டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங் கோடு சாலையில், தொடக்க வேளாண் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகி றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக் கம். அந்தவகையில் விவசா யிகள் 470 பருத்தி மூட்டை களை கொண்டு வந்திருந்த னர். இதில், ஆர்சிஹெச் ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,150 முதல் ரூ.8,100 வரை யிலும், மட்டரகம் (கொட்டு) ரூ.4,229 முதல் ரூ.4,935 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.11.50 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது.
தேங்காய் ஏலம்
பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் செவ்வாயன்று நடைபெற்ற இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 5,364 கிலோ தேங்காய்களை விவசாயி கள் கொண்டு வந்திருந்தனர். மொத்தம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 805க்கு வர்த்தகம் நடைபெற்றது.