ஈரோடு, டிச.6- அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, வெள்ளியன்று நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் முற்போக்கு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா வில் அமைக்கப்பட்டுள்ள சட்டமேதை அம்பேத்கர் உருவ சிலைக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை யில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலை வர் பி.பி.பழனிசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனி சாமி, ஆர்.கோமதி, பி.சுந்தரராஜன், கே. மாரப்பன், நகரச் செயலாளர் வி.பாண்டி யன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பவானி தாலுகா கமிட்டி சார்பில் மாவட் டக்குழு உறுப்பினர் இலா.ஆற்றலரசு தலைமையில் படம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோபியில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிக் கப்பட்டது. பொருளாளர் மாரிமுத்து தலைமையில் தனசிங் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பேத் கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூ வி மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை
கோவை சிவானந்த காலனி டாடா பாத் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோ கரன், கே.அஜய், கே.எஸ்.கனகராஜ், என்.ஆறுச்சாமி, கிழக்கு நகரச் செயலா ளர் சுபாஷ் மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் ஆறுச்சாமி, பொருளாளர் மகேஸ் வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை புலியகுளத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக டாக்டர் அம்பேத்கர் நினைவை போற்று கின்ற விதமாக மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட துணைச் செயலாளர் த.நாகராஜ் தலைமை வகித்தார். இந் நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் 66 ஆவது வார்டு செயலாளர் கே.நாக ராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.
இதேபோன்று, சேலம் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ் வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தை வேலு, துணைச்செயலாளர் பி.செந்தில் குமார், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சேது மாதவன், பாலர் பூங்கா மாநில ஒருங் கினைப்புக்குழு நிர்வாகி கே.ஜோதிலட் சுமி, சிபிஎம் வடக்கு மாநகரச் செயலா ளர் என்.பிரவீன்குமார், வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் ஆர்.குருபிர சன்னா உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, மேட்டூர் அணை சின்ன பார்க் அருகே உள்ள சிஐடியு அலுவலகத்தில் அம்பேகத்கரின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.இளங்கோ, சிஐடியு மாவட்ட நிர்வாகி சி.கருப்பண் ணன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி து. சிங்கராயன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே அம்பேத்க ரின் உருவப்படத்துக்கு மாலை அணி வித்து மலர்தூவி மரியாதை செலுத்தப் பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம் பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.மாரிமுத்து, சி.நாகராசன், ஒன்றி யச் செயலாளர்கள் கார்ல் மார்க்ஸ், ஆர்.ஜோதிபாசு, கே.கோவிந்தசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிபிஎம் பகு திச் செயலாளர் ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வே.விசுவநாதன், ஆர்.சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.