districts

img

புரட்சியாளர் பகத்சிங் பிறந்த நாளை, முன்னிட்டு பனை விதை நடும் பணி

திருப்பூர் செப்.22- புரட்சியாளர் தோழர் பகத்சிங்கின் பிறந்தநாளை முன் னிட்டு, வாலிபர் சங்கத்தினர் பனை விதை நடும் பணியில் ஈடு பட்டனர். வரும் செப்டம்பர் 27ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்  புரட்சியாளர் தோழர் பகத்சிங்கின் பிறந்தநாள் நாடு முழுவ தும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம், முத்துச்செட் டிபாளையம் கிளை சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி ஞாயி றன்று நடைபெற்றது. சாலைபாளையம் பகுதியில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கிளைச் செயலாளர் எம்.ரவீந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் பி. பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் செ. மணிகண்டன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், மாவட்ட  துணைச்செயலாளர் வீ.பாலசுப்பிரமணியம், ஒன்றியச் செய லாளர் ஹனிபா, பொருளாளர் ஆர்.வடிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.தங்கராஜ், எஸ்.நந்தகோபால், பொறுப்பாளர்கள் ஆர்.பழனிச்சாமி, சி.பழனிச்சாமி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.