districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பனை விதைகள் நடும் பணி

நாமக்கல், செப்.15- நாமக்கல் மாவட்டத்தில், காவிரி கரையோரப் பகுதிகளில் பனை விதைகள் நடும் பணியினை அமைச்சர் மா.மதிவேந் தன் ஞாயிறன்று துவக்கி வைத்தார். தமிழ்நாட்டின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்விய லோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பு இல்லாமலே காலத்துக்கும் பயன்தரும் பனை மரத்தை அழியாமல் பாது காக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு  செல்லும் விதமாகவும் “காவிரிக்கரையில் ஒரு கோடி பனை  விதைகள் நடும் பணி” ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை  நடைபெற உள்ளது. அதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட் டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூர் காவிரி கரைப் பகுதியில், காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஞாயி றன்று துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் உமா,  ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, குமாரபாளையம் நக ராட்சி எல்லைக்குட்பட்ட காவேரி கரையோரப் பகுதிகள் மற் றும் நீர்நிலைப் பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி நடை பெற்றது. இதில் நகர்மன்றத் தலைவர் த.விஜய்கண்ணன், ஆணையர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சேலம், செப்.15- தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப் படும் சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு  தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்க ளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சனி, ஞாயிறு மற்றும் மிலாடி நபி என தொடர் விடு முறையை முன்னிட்டு ஏற்காட்டிற்கு அதிகள வில் சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, குகை கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி, காட்சி முனை பகுதிகள் மற்றும் படகு இல் லத்தில் குடும்பத்துடன் கூடி பொழுது போக்கி னர். படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்று லாப் பயணிகள் வருகையால், ஏற்காட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாகன போக்கு வரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு சிறை

தருமபுரி, செப்.15- லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவல ருக்கு தருமபுரி நீதிமன்றம் சிறை தண்டனை  விதித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே  உள்ள நடுகுட்லானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகன். இவர் தனது தாயார் காளியம்மாளுக்கு, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஓய்வூ தியம் பெற சிக்கதோரணபெட்ட வருவாய்  கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் (47) என்பவரிடம் கடந்த 2013 ஆம் ஆண்டு மனு அளித்தார். அதற்கு முருகேசன் ரூ.5ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் ஓய்வூதி யம் வாங்கி தர ஏற்பாடு செய்ய முடியும் எனக் கூறியுள்ளார். லஞ்சம் தர விருப்பமில்லாத  நாகன், இதுகுறித்து தருமபுரி ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்புப்பிரிவில் புகார ளித்தார். அதனைத்தொடர்ந்து 2013 ஆம்  ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று, தரும புரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர், ரசாயணம் தடவிய  ரூபாய் நோட்டுக்களை நாகனிடம் கொடுத்து,  கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் கொடுக்க செய்தனர். நாகனிடம், முருகேசன்  லஞ்ச பணத்தை பெறும் போது அங்கு மறைந் திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்  அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை தருமபுரி தலைமை குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசா ரணை முடிவடைந்து, தலைமை குற்றவியல் நடுவர் சந்தோஷ், முருகேசனுக்கு 2 ஆண்டு கள் சிறை தண்டனை விதித்து உத்தர விட்டார்.

அவிநாசியில் மக்கள் நீதிமன்றம்

அவிநாசி, செப்.15- அவிநாசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 464 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதற்காக லோக் அதாலத் எனப்படும் தேசிய  மக்கள் நீதிமன்றம், அவிநாசி சார்பு நீதிமன்ற வளாகத்தில் சனி யன்று நடைபெற்றது. சார்பு நீதிபதி சி.செந்தில்குமார் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.வடிவேல், மாவட்ட ஓய்வு நீதிபதி ராம்ராஜ், வழக் குரைஞர்கள் குமார், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்துத் தொடர்பான சிவில் வழக்கு, காசோலை மோசடி வழக்கு, சொத்து வரி மேல் முறையீட்டு வழக்கு, வாராக்கடன் வழக்கு  என மொத்தம் 464 வழக்குகள் சமரச தீர்வு காண வழிவகை  செய்யப்பட்டது. மொத்தம் ரூ.3 கோடியே 59 லட்சத்து 96  ஆயிரம் மதிப்பில் வழக்குகளுக்கு தீர்வு காணபட்டது.

விளைநிலம் வாங்க உதவி

ஈரோடு, செப்.15- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவசாயம் செய்ய நன்னிலம் நில உடைமைத் திட்டம் என்ற புதிய திட் டம் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட அட்சியர் ராஜகோபால் சுன் கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசால் நிலமில்லா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவ சாயம் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்  (தாட்கோ) மூலமாக நன்னிலம் நில உடைமைத் திட்டம்  என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்  நிலம் வாங்க சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது  அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர்  புஞ்சை நிலம் வாங்கி கொள்ளலாம். மேலும், இத்திட் டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவிகிதம் முத் திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்ப டும். இத்திட்டத்தில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  18 முதல் 65 வயதிற்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்ப தாராரே நிலம் தேர்வு செய்ய வேண்டும். மேலும், விபரங்க ளுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், 6 ஆவது  தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு. தொலைபேசி  எண் – 0424-2259453 அனுகலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மருத்துவ முகாம்

நாமக்கல், செப்.15- பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற, இலவச பொது மற் றும் புற்றுநோய் மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து  கொண்டு, பயனடைந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள  ஆவத்திபாளையம் பகுதியில், ஊர் பொதுமக்கள் மற்றும் தனி யார் மருத்துவமனை சார்பில், இலவச பொது மற்றும்  புற்றுநோய் மருத்துவ முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பங்கேற்று ரத்த அழுத்தம், சக்கரை நோய், புற்றுநோய்  உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டனர். புற்றுநோய் அறிகுறி உள்ளவர்களுக்கான உரிய சிகிச்சை வழி முறை ஆலோசனை வழங்கப்பட்டது.

ரேசன் அரிசியை கடத்த முயற்சி: 6 பேர் கைது

சேலம், செப்.15- சேலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 6 டன்  ரேசன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்து, இதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர். சேலம் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வா ளர் சங்கீதா தலைமையிலான தனிப்படையினர், சூரமங்கலம்,  மோட்டூர் சுடுகாடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு லாரியில் இருந்து மினி லாரியில் ரேசன் அரிசி  மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். சந்தேகத்தின்  பேரில் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் சேலம், சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மூலம் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முத்து என்பவரிடம் ஒப்படைப்பதற்காக அரிசி  மூட்டைகளைக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மூட்டைகளை மினி லாரியில் ஏற்றிக் கொண் டிருந்த ஜாகிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் (52), லோகநாதன் (19), தாரமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் (45),  உடையாபட்டியைச் சேர்ந்த சுதாகர் (25) சந்தோஷ் குமார்  (33), சின்ன ராஜா ஆகிய 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து  6 டன் ரேசன் அரிசி மூட்டைகள், 3 இருசக்கர வாகனங்கள், மினி  லாரி, சரக்கு வாகனம் உட்பட 7 வாகனங்களை போலீசார்  பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள சரவணன், முத்து  ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு

நாமக்கல், செப்.15 குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி யில் இயற்கை விவசாயம் குறித்து மாணவர்கள் விழிப் புணர்வு நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா  பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. பள்ளி  வளாகத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகை யில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டனர். இதில், பசுமை  இயற்கை விவசாயம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் தக்காளி, கத்தரிக்காய் மற்றும்  மிளகாய் செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர். விவசாய  மற்றும் பசுமை தொழில்நுட்பத்தின் மீது அக்கறையுடன் மாண வர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் நேரத்தை பயனுள்ள தாக செலவிட்டு இயற்கையான முறையில் செடிகளை வளர்த்து வருகின்றனர்.  இதுகுறித்த அனுபவத்தை கல்லூரியின் முதல்வர் டாக்டர்  எஸ் விஜயகுமார் கூறுகையில், இந்த நிகழ்வின் ஒரு பகுதி யாக பள்ளி வளாகத்தில் பயிரிடப்பட்ட விவசாய பொருட் களை அறுவடை செய்த காய்கறிகளை கல்லூரி உணவகத் திற்கு வழங்கி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து கின்றனர், என்றார்.

வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை

மேட்டுப்பாளையம், செப்.15- மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வாகனங் களை வழி மறித்தபடி நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன  ஓட்டிகள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகப் பகுதி, காட்டுயானைகளின் வலசை பாதை என்பதால் இவற் றின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இவை அவ்வப் போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியே வருகின்றன. குறிப்பாக, மலைக்காட்டின் நடுவே  அமைந்துள்ள மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் அவ்வப்போது யானைகள் குறுக்கிடுவதால், வாகன ஓட்டிகள்  கவனத்துடன் பயணிக்க வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி  வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகு தியில் நடு சாலையில் ஒற்றை காட்டு யானை நின்று கொண்டி ருந்தது. இதனால், இவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் சாலையிலேயே நிறுத் தப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை யின் நடுவே நிற்பது நடப்பது என குறுக்கிட்ட காட்டு  யானையால் வாகனங்கள் கடந்து செல்ல இயலாத சூழல் ஏற் பட்டது. பின்னர் மெல்ல மெல்ல யானை அருகில் உள்ள  வனப்பகுதிக்குள் சென்று மறைந்த பின்னர் வாகன போக்கு வரத்து சீரானது. இதனை அவ்வழியாக சென்ற பயணிகள் தங் களது செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். தற்போது  அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகி றது.