சேலம், ஆக.31- காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி செப்.8 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஒத் திகை மேட்டூரில் சனியன்று நடைபெற்றது. காவிரிக்கரையில் செப்.8 ஆம் தேதியன்று ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடங்க உள்ளதையொட்டி, இதற்கான முன் னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனியன்று நடைபெற்றது. சேலம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத் தில், ஆட்சியர் ரா.பிருந்தாதேவி பேசுகை யில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் “காவிரிக் கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி” ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை வருகின்ற செப்.8. ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதனடிப்படையில், செப்.1 ஆம் தேதி மாநிலம் முழுக்க பனை விதைகள் சேகரிப்பும், அவற்றை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயி லாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்க இருக் கிறது. இதில், பங்கேற்கும் மாணவ, மாணவி யர்கள். சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர் வலர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங் கள் Udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதில் பங் கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றி தழ் வழங்கப்பட உள்ளது, என்றார். இக்கூட் டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. மேனகா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வாணீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெகநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், சாம்பள்ளி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களைக் கொண்டு பனைவிதைகள் நடும் பணிக்கான ஒத்திகை சனியன்று நடைபெற்றது. ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் ஒருங் கிணைப்பாளர்கள் மு.ராஜவேலு, நீ.ஹரி கிருஷ்ணன் ஆகியோர் பனை விதை நடவு முறை குறித்து விளக்கமளித்தனர். இதில் சுமார் 100 பணியாளர்கள் கலந்து கொண்டு 30 நிமிடங்களில் 100 குழிகளைத் தோண்டி பனை விதைகளை நட்டு ஒத்திகையில் ஈடு பட்டனர்.