districts

img

ஒரு சீத்தாப்பழத்தில் 20 தலைவர்களின் படங்கள்!

கோவை, ஆக.8- கோவையைச் சேர்ந்த நகை வடிவ மைப்பாளர் ஒரே சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தலைவர்களின் ஓவி யங்களை வரைந்து அசத்தியுள்ளார். கோவை மாவட்டம், குனியமுத்தூர்  பகுதியைச் சேர்ந்த யூ.எம்.டி.ராஜா என் பவர், தங்க நகை வடிவமைப்பாளராக பணி செய்து வருகிறார். மேலும், இவர் அரிசி, மாங்கனி, முட்டை ஓடு, சோப்பு,  மெழுகு உள்ளிட்டவையில் வித்தியாச மான முறையில் படங்களை வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை யில், ஆக.15 ஆம் தேதியன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலை யில் தேச தலைவர்களை போற்றும் வித மாக கனிந்தவர்கள், முதிர்ந்தவர்கள்,  இனிமையானவர்கள் என்பதை உணர்த்தி சீத்தாப்பழத்தில் அவர்களது படத்தை வரைந்து அசத்தியுள்ளார். சீத்தாப்பழத் தில் உள்ள கணுவில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங், ராஜேந் திர பிரசாத், பாரதியார், நேரு, வேலு நாச் சியார், அம்பேத்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், காமராஜர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்களின் படங் களை வண்ண நிறங்களுடன் வரைந் துள்ளார். சுமார் 12 மணி நேரத்தில் தேசத் தலைவர்களின் படங்களை வரைந் துள்ள இவருக்கு, பலரும் பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.