கோவை, பிப்.9- சூலூர் அருகே ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூர் வழியாக செல்லும் திருச்சி சாலையில் ஞாயிறன்று பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்க ளாக ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை. இதற்கு கார ணம் ரேசன் கடை அமைந்துள்ள பகுதி மற்றும் கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுவதாகும். இதனால் தற்காலிக ஏற் பாடாக சிந்தாமணிபுதூர் பகுதியில் வேறொரு இடத்தை பொதுமக்களுக்கு வசதியாக இருக்குமாறு கட்டிடத்தை வாடகைக்கு ஏற்பாடு செய்து, அதில் தற்போது ரேசன் பொருட் கள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று குறிப்பிட்ட நியாய விலைக்கடையில் பொருட் கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. திடீரென சிலர் அப்பகுதியில் ரேசன் பொருட்களை வழங்கக்கூடாது என கூறியதால், சாலை மறியலில் ஈடுபட்டோம், என்றனர். இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணி யில் இருந்த சூலூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், ரேசன் பொருட்கள் தற்போது வைக் கப்பட்டுள்ள கட்டிடத்தில் வழங்கப்படும், என தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.