districts

img

போராட்டக்காரர்களை தாக்க முயன்ற காவல் ஆய்வாளர்

கோவை, ஜூன் 11- மேட்டுப்பாளையம் அருகே குடி நீரில் உப்புநீர் கலந்து வழங்கு வதை கண்டித்து, அப்பகுதி பொது மக்கள் பெள்ளேபாளையம் ஊராட் சியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக் காரர்களை காவல் ஆய்வாளர் தாக்க முயன்றதால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அருகே உள்ள பெள்ளே பாளையம் ஊராட்சியில் குடிநீரில் உப்புநீர் கலந்து வருவதாக குற்றஞ் சாட்டியும், பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் சிறுமுகை - அன்னூர் சாலையில் பொதுமக்கள்  மறியலில் ஈடுபட்டனர். குடிநீரில் உப்பு நீர் அதிகமாக வருவதால் அதனை பொதுமக்கள் குடிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், எனவே, இப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. 100க்கும் மேற்பட்ட பொதுமக் கள் காலிக்குடங்களுடன் சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிறுமுகை போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் சம் பவ இடத்திற்கு வந்து பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூத்தாமன்டி பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கும் இடத்தில் ஓடை நீர் அதிகளவில் பவானி ஆற்றில் கலப்பதால் இந்த பிரச்சனை உள்ள தாக ஊராட்சி தலைவர் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்போது கூட் டத்தை கலைக்க வந்த அன்னூர்  காவல் ஆய்வாளர் நித்யா திடீரென போராட்டக்காரர்களை கலைந்து செல்ல கூறி அங்கு கூடியிருந்தவர் களை தாக்க முயன்றார். இதனால், ஆவேசமடைந்த மறியலில் ஈடுபட்ட பெண்கள், காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து  அங்கு கூடியிருந்த சில அரசியல் பிரமுகர்கள் ஆய்வாளரை சமாதா னம் செய்து அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் ஊராட்சி மன்ற அலு வலகம் வர சொல்லி பொதுமக்களி டம் பேசிய ஊராட்சி தலைவர், இதற்கு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச் சர்களிடம் பேசி நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தார். இத னால் சமாதானமடைந்த பொதுமக் கள் அனைவரும் கலைந்து சென்ற னர்.