கோவை, செப்.25- கோவையில் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை, வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி, விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள் ளனர். இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், வெள்ள லூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது கோவை மக்களின் நீண்ட கனவு. அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை வழியாக செல்லும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வெள்ள லூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணி களுக்கு சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 65 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில், கட்டுமான பணிகள் அனைத்தும் நிறுத்தப் பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் அமைந்தால் அனைத்து பிரதான சாலைகளுக்கும், அண்டை மாநிலங்களில் சென்று வர போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும். மேலும் நீலாம்பூர், செட்டிபாளையம் என வேறு பகுதிகளுக்கு பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை மாற்றினால் அது கூடுதல் செலவு மற்றும் காலதாமதமாகும். எனவே, நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.