தருமபுரி, ஆக.20- மொளப்பனஅள்ளி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடத்தை மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் திங்க ளன்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்ட மொளப்பன அள்ளி கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகே அரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்தை நீண்ட காலமாக ஊர் பயன்பாட்டிற்கும், திருவிழாவிற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊராட்சிக்கே சம் பந்தமில்லாத ஒருவர் பொதுபயன்பாட்டிற்கான இடத் திற்கு முறைகேடாக பட்டா பெற்றுள்ளார். எனவே, இந்த பட்டாவை ரத்து செய்து, நிலத்தை கிராம பயன் பாட்டிற்கு வழங்க வேண்டும், என வலியுறுத்தப்பட் டுள்ளது.