நாமக்கல், மார்ச் 12- பொது வழித்தட உரிமையை மறுக்கும் நபர்கள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். திருச்செங்கோடு அடுத்துள்ள மாரப்பாளையம் அருந்ததிய தெரு இலுப்பிலி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, இலுப்பிலி கிராமத்தில் 17 குடும்பங்கள் காட்டு சாலைப் பகுதியில் வசித்து வருகிறோம். இங்கு வசிக்கும் குடும்பங்கள் செல்வத றக்கும், விவசாயம் செய்யவும், பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் என பல்வேறு தேவைகளுக்காக 10 தலைமுறை களாக எங்களுக்கு தட பாத்தியப்பட்ட சாலையில் சென்று வருகிறோம். இந்நிலையில் அருகில் உள்ள கன்னி காடு என்ற ஊரைச் சேர்ந்த ஒரு சில தனிநபர்கள், இந்த வழியில் நாங்கள் வரக்கூடாது என வழித்தடத்தை மறித்து பெரிய கற்களை கொண்டு பாதையை அடைத்து விட்டனர். மேலும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் எங்களை சாதிய ரீதியாக திட்டுகின்றனர். எனவே குழந்தைகள் பள்ளி சென்று வர வழியில்லாத நிலையில், வழித்தடத்தை அடைத்துள்ள நபர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.