தருமபுரி, அக்.1- சிட்லிங் ஊராட்சியில் மலையாளி பழங் குடியின மக்களின் பூர்வீக நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தருமபுரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் அலு வலகத்தில், மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் அளிக் கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, அரூர் அருகே உள்ள சிட்டிங் ஊராட்சியில் மலை யாளி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்ற னர். இவர்கள் தங்களது பூர்விக நிலத்தில் விவ சாயம் செய்து வந்தனர். மேலும், இவர்களின் அனுபவ நிலங்களுக்கு அரசு வரையறுக்கப் பட்ட பட்டா வழங்கியது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி சமூகத்தினர், மலையாளி பழங்குடியின மக்க ளிடமிருந்து ஏமாற்றி அடிமாட்டு விலைக்கு பட்டா நிலங்களை வாங்கியுள்ளனர். எனவே, அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் 6 ஆம் தேதி யன்று அரூர் கோட்டாட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது. இந்த மனுவின் மீது கோட்டாட்சி யர், மாவட்ட பத்திரவு பதிவு அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார். விசாரணை நடை பெற்றுக்கொண்டிருக்கிற பட்சத்தில் அரூர் வட்டாட்சியர், பழங்குடி மக்களின் நிலத்தை சர்வே செய்து அளக்க உத்திரவிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, இப்பிரச்சனையின் மீது கவனம் செலுத்தி, மலையாளி பழங்குடியின ருக்கு அரசு வழங்கிய பட்டா நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்வில் மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச்செயலாளர் கண் ணகி, மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லை யன், மாவட்டத் தலைவர் அம்புரோஸ், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுணன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.குமார் ஆகியோர் உடனிருந்த னர்.