நாமக்கல், பிப்.28- ராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர் உயிரி ழந்த சம்பவத்தில், சாதி அடிப்படையில் அவரை தாக்கிய மாணவர் மீது வன்கொ டுமை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், என வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் புகாரளித்தனர். இதுகுறித்து உயிரிழந்த மாணவர் கவின் ராஜின் தந்தை பிரகாஷ், தாய் வனிதா மற்றும் அவரது உறவினர்கள் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, எங்களது 3 ஆவது மகனான கவின்ராஜ் (14), ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்.26 ஆம் தேதி பள்ளியில் கவின்ராஜ் மயங்கி விழுந்து விட்டதாக எனது கைப் பேசிக்கு, தலைமை ஆசிரியர் தெரிவித்தார். நாங்கள் சென்ற போது மகனை பள்ளியில் இருந்து ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தலைமை ஆசிரி யர் தெரிவித்தார். அங்கு சென்று கவின்ராஜை பார்த்தபோது, உடல் முழுவதும் ரத்தமும், பள்ளிச் சீருடை கிழிந்த நிலையிலும், பலத்த காயத்துடனும் காணப்பட்டார். தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, கழிவறையில் மயங்கி விழுந்து விட்டதாக நடந்த சம்ப வத்தை மறைக்க முயற்சித்தனர். அங்குள்ள சக மாணவர்களிடம் விசாரித்தபோது, கவின் ராஜ் கொல்லப்பட்டது தெரியவந்தது. சாதிய அடிப்படையில் மகனை கொலை செய்த மாணவரை வன்கொடுமை தடுப்புச் சட் டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மாணவர் களை பாதுகாக்கத் தவறிய தலைமை ஆசிரி யர் சோமசுந்தரம் மற்றும் உடந்தையாக இருந்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மேலும், கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண் டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோத லில் கவின்ராஜை தாக்கிய, மாணவர் கைது செய்யப்பட்டு, சிறாா் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்கு நர் முருகன் அப்பள்ளிக்கு சென்று ஆசிரி யர்கள், மாணவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இச்சம் பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியத் துடன் செயல்பட்டார்களா? என்பது குறித் தும் விசாரணை நடத்தினர். இதனி டையே, நாமக்கல் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டி ருந்த மாணவர் உடலை, நீண்ட போராட் டத்துக்கு பின் பெற்றுக்கொண்ட உறவி னர்கள், ராசிபுரம் கொண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியபின் எரியூட்டினர்.