தருமபுரி, ஆக.10- தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஜக்கசமுத்திரம் செல்ல அணுகுசாலை அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணியிடம் அக்கிராம மக்கள் மனு அளித்தனர். தருமபுரி - பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலை (844) அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. சாலைப்பணிகள் தொடங் கிய நாள் முதலே இந்த நெடுஞ்சாலை ஒட்டியுள்ள ஜக்கசமுத்திரம், பொம்ம னூர், பந்தார அள்ளி, சின்ன கோடிகாண அள்ளி, பெரிய கோடிகாணஅள்ளி, முல் லாபுதூர், ஒட்டுப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்களில் வசிக்கும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் சரி யான முறையில் பயன்படுத்த ஏதுவாக அணுகுசாலைகள் அமைக்கவில்லை. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஜக்கசமுத்திரத்திற்கு செல்ல 8 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டியுள் ளது. இதனால் விவசாய விளைப் பொருட் களை சந்தைப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஜக்கசமுத்திரம் செல்ல அணுகுசாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணியிடம் சனியன்று, அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.