districts

90 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

சேலம், செப்.20- ஆத்தூர் நகராட்சிக்கு 90 லட்சம் லிட் டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட  ஆட்சியரிடம் நகர்மன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி  33 வார்டுகளைக் கொண்டது. ஆத்தூர் கோட்டை, முல்லைவாடி, புதுப்பேட்டை, கடைவீதி மற்றும் காந்தி நகர் ஆகிய இடங்களில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அங் குள்ள பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது. ஆத்தூர் - மேட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கல்லாநத்தம் முட்டல் ஏரியில் உள்ள கிணறு, அய்யனார் கோவில் ஏரியில் உள்ள கிணறு என  குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஆத்தூர் நகராட் சிக்கு என ஆத்தூர் - மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, குடி நீர் விநியோகம் செய்ய வேண்டும் என  அரசு உத்தரவிட்டது. ஆனால், தற் போது இத்தனை இடங்களில் இருந்து  குடிநீர் பெறப்பட்டும், 15 நாட்களுக்கு  ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக் கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வரு கின்றனர். மேட்டூரில் தற்போது 100  அடிக்கு தண்ணீர் இருந்தும் ஆத்தூர்  பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வில்லை. வாரம் ஒரு முறையாவது குடி நீர் விநியோகம் செய்ய வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். எனவே, நகராட்சிக்கு செய்த  ஒப்பந்தப்படி 90 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவியிடம், ஆத்தூர் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜீவா ஸ்டாலின், மீனாட்சி வேலுமணி, பிரபு ஆகியோர் மனு அளித்தனர்.