ஈரோடு, ஆக.3- பொது சுகாதாரப் பணிகள் ஏலமுறை யில் தனியாருக்கு வழங்குவதை தடுக்க வலியுறுத்தக் கோரி கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை யிடம், தூய்மைப் பணியாளர்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கருமாண்டிசெல் லிபாளையம் பேருராட்சியில் பணிபுரி யும் தூய்மைப் பணியாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கரு மாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி யில் பொது சுகாதாரப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள் பல ஆண்டுக ளாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் முடித்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங் கப்பட வேண்டும். ஆனால், பொது சுகா தாரப் பணியினை வெளிக்கொணர்வு முகமை முறையில் தனியாருக்கு ஏல முறையில் விடப்படுகிறது. அரசின் இம் முடிவு மக்களுக்கு அரசு பணி என்பது முற்றிலுமாக இல்லை என நிலையை உருவாக்கும். தனியாருக்கு வழங்குவ தால் தொழிலாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் பாதிக்கும்.எனவே, தனியாருக்கு விடும் முடிவை கைவிட வேண்டும். பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தக் கோரியுள்ளனர்.