districts

img

சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியை தடை செய்ய மனு

நாமக்கல், ஜூலை 9- சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் கல் குவாரியில் தடை செய்ய வேண் டும் என பதாகைகளுடன் விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றி யம், கோக்கலை கிராமம், எளையாம்பா ளையம், நெய்க்காரம்பாளையம் பகுதி யில் புதிய கல்குவாரி அனுமதி வழங்கி யுள்ளனர். இதனை தடை செய்ய வேண் டும் என்று, பலமுறை அதிகாரிக ளுக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அளித்து வந்தனர். இதில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப் படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் சொந்த நிலத்தில் காத்திருக்கும் போராட்டத்தை சில தினங்களுக்கு முன்பு நடத்தினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை காவல் துறையி னர் கைது செய்து மாலையில் விடுவிக் கப்பட்டனர். பின்னர், விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் திங்க ளன்று விவசாயிகள் கோரிக்கை மனுவு டன் கோரிக்கைகள் அடங்கிய பேனர் பதாகைகளை மாட்டிக் கொண்டு நூதன மான முறையில் கோரிக்கை மனுவினை ஆட்சியரிடம் வழங்கினார்கள்.