districts

img

பட்டினி சாவிலிருந்து மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளை பாதுகாத்திடுக அமைச்சரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

சேலம், அக்.14- மரவள்ளிக்கிழங்கு விவசாயி களை பட்டினி சாவிலிருந்து பாது காத்திட, உடனடியாக முத்தரப் புக் கூட்டம் நடத்தி உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி, சுற்று லாத்துறை அமைச்சர் ராஜேந்தி ரனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். இதுதொடர்பாக அம்மனுவில் கூறியிருப்பதாவது, சேலம், நாமக் கல், திருச்சி, பெரம்பலூர், தருமபுரி உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட மாவட் டங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகு படியாகச் செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ16 ஆயிரம் வரை கொள்முதல் விலை கிடைத்தது. அது தற்போது ரூ.6 ஆயிரத்திற்கும் கீழ் வீழ்ந்துவிட்டது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால், இன்னும் வீழ்ச்சி அடையும். கடந்தாண்டு தாய்லாந்து ரகம் பாய்ண்ட் ரூ. 600க்கும் மேல் விற்றது. இப்போது அது ரூ.270க்கும் கீழும், பிற ரகம் ரூ.260க்கும் கீழும் வீழ்ந்துவிட்டது. மழைக்காலம் தொடங்கியுள்ள தால் இன்னும் விலை சரியும் பேரபாயம் உள்ளது. இதுதொடர் பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், முதல்வரின் தனிபிரிவு, அன்றைய சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, சேகோ சர்வ் இயக்குநர், நாமக்கல்  ஆட்சியர், இத்துறைகள் சம்மந்த பட்ட இயக்குநர்கள், ஆணையர் கள் ஆகியோருக்கு கடிதம் அனுப் பப்பட்டது. மேலும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித் தும், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மரவள்ளிக்கிழங்கு கொள்மு தல் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவில் லையெனில், அதாவது இப்படியே விலை சரிந்துகொண்டே போனால், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் தற்கொலைக்கு தள் ளப்பட்டும் சூழல் நிலவுகிறது. ஜவ் வரிசிக்கு உரிய விலை கிடைக்கா ததால்தான், மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ந்திட காரணம் என்றும், ஜவ்வரிசி உற்பத்தியில் நடைபெ றும் கலப்படம்தான் வெளி மார்க் கெட்டில் விற்பதற்கான காரணம் என்றும், அதனால்தான் மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சிக்குக் காரணம் உள்ளிட்ட பலவிதமான கருத்துகள் நிலவு கிறது. வரலாறு காணாத விலை வீழ்ச்சியில் இருந்து மரவள்ளிக்கி ழங்கு விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக உடனடியாக முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி, கடந்தாண்டைப்போல் இந்த ஆண் டும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன் றுக்கு ரூ16 ஆயிரம் கொள்முதல் விலை கிடைத்திட உரிய நடவ டிக்கை செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியு றுத்தி அக்.25 ஆம் தேதியன்று சேலம் சேகோசர்வ் முன்பு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத்தலை வரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு கலந்து கொள்ள உள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்ன தாக, இந்நிகழ்வில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, துணைத்தலைவர் பி.தங்க வேலு ஆகியோர் கலந்து கொண்ட னர்.