districts

img

சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தியை துவங்கிடுக

நாமக்கல், டிச.6- அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தியை துவங்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல்லில் கரும்பு  விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வ ருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடு பட்டனர். கரும்பு இன்சூரன்ஸ் திட்டத்தை ஆண்டு முழுவதும் பதிவு செய்து விவசாயிகளுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண் டும். கரும்பு விவசாயத்தை பாதுகாக்க அனைத்து சர்க்கரை ஆலைகளிலும், எத்த னால் உற்பத்தியை தொடங்க வேண்டும். தனி யார் சர்க்கரை ஆலைகளில் எடை மோசடி, ரொக்க வரி மோசடி ஆகியவற்றை தடுத்து  நிறுத்த வேண்டும்.  2022 – 2023 ஆம் ஆண் டிற்கு ஒன்றிய அரசு 10.25 பிழி திறனுக்கு ரூ.3 ஆயிரத்து 50 என அறிவித்துள்ளது. 9.5 பிழி திறனுக்கு ரூ.2 ஆயிரத்து 821 கிடைக்கும். பொன்னி சர்க்கரை ஆலையின் பிழி திறன்  9.9 டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 943 கிடைக் கும். எனவே கரும்பு விவசாயிகளுக்கு கூடுத லாக கிடைக்க, மாநில அரசு வருவாய் பங்கீடு முறையை ரத்து செய்து, பரிந்துரை விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் என  அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள எலந்த குட்டை கிளை அஞ்சல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க ஆலை மட்ட  கமிட்டி உறுப்பினர் லட்சுமணன் தலைமை வகித்தார். இதில், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் செ.நல்லாக்கவுண் டர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட பொருளாளர் இ.கோவிந்தராஜ் மற் றும் கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டு, முதல்வருக்கு மனு அனுப்பினர்.