கோவை, ஜூன் 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளில் உடனடி தலையீடு காண வலியுறுத்தி கோவை மாந கராட்சி ஆணையரிடம் சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்த னர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழு தலைவரும், 12 ஆவது வார்டு மாமன்ற உறுப் பினருமான வி.இராமமூர்த்தி தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.பூபதி, கண் ணகி ஜோதிபாசு, என்.சுமதி ஆகியோர் செவ் வாயன்று மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிர பாகரனை சந்தித்து அளித்த மனுவில் தெரி வித்திருப்பதாவது, கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 12 ஆவது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் மூடுபலகையுடன் பிரதான வடிகால் அமைக்கப்பட வேண்டும். சின்னவேடம்பட்டி நடுநிலைப்பள்ளி அரு கில் உள்ள முழு நேர நூலகத்தில், இந்த ஆண் டின் நூலக நிதியின் மூலம் மாணவர்கள் மற் றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக படிப்பறை மற்றும் கழிப்படைத்தை யும் கட்டிக் கொடுக்க வேண்டும்.
சின்ன வேடம்பட்டி ஏரியின் கரையோரம் நூற்றுக்க ணக்கான பொது மக்கள் நடைப்பயிற்சி மேற் கொண்டு வருகின்றனர், இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் கரையை திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர். இதனை தடுத்து, குட்டையை சுற்றி கம்பிவேலி மற்றும் மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைத்து தர வேண்டும். மேலும், 12 ஆவது மற்றும் 13 ஆவது வார்டு பகுதிகளுக்கு அத்திக்கடவு 3 ஆவது குடிநீர் திட்டத்தில் மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட் டும், பகிர்மான குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 16 கி.மீ தூரம் சுற்றி வந்து நீர் ஏற்றுவதை தவிர்ப்பதற்கு, நஞ்சேக வுண்டன்புதூர் சந்திப்பிலிருந்து இணைப்பு எடுத்து தெற்கு நோக்கி நஞ்சேகவுண்டன் புதூர் மேல்நிலை தொட்டி, உடையாம்பாளை யம் மேல்நிலை தொட்டி மற்றும் சீனிவாசா நகர் மேல்நிலை தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் வழிப்பாதை சுமார் 2 கி.மீ தூரம் மட்டுமே உள் ளது. எனவே, இந்த பாதையின் வழியாக இந்த நிதியாண்டில் மதிப்பீடு தயாரித்து பணி செய்து கொடுக்க வேண்டும். இதேபோன்று, கோவை மாநகராட்சி 13 ஆவது வார்டு அடிப்படை வசதிகளான. மாமன்ற உறுப்பினர் மற்றும் சுகாதார பிரிவு அலுவலக மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடம் கட்டித் தர வேண்டும். நஞ்சேகவுண் டன்புதூர் முதல் அஞ்சுகம் நகர் மண் சாலையை தார் சாலையாக அமைத்திட வும் நஞ்சேகவுண்டன்புதூர் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர், மின்விளக்கு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மாநகராட்சி 24 ஆவது வார்டு தூய் மைப் பணியாளர்கள் சென்ற 20 நாட்க ளுக்கு முன்பு கிழக்கு மண்டலம் உதவி ஆணையாளரிடம் கொடுத்த புகார்களை விசாரித்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.
28 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதிக்குப்பட்ட பட்டா ளம்மன் கோவில் வீதி பட்டியலின மக்கள் அதி கம் வசிக்க கூடிய நெருக்கடியான பகுதியாக உள்ளது. மழைநீர் வடிகால் மிகவும் பழு தடைந்து உள்ளதால் மழைகாலங்களில் தண் ணீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிர மத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள். அத னால், பழைய மழைநீர் வடிகாலை அப்புற படுத்தி புதிதாக அமைத்திட வேண்டும். இப்ப குதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தை பராமரிப்பு பணி செய்து அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும்.. ஆவாரம் பாளையம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர் நிலை பள்ளியாக தரம் உயர் திட வேண்டும். ஆவாரம்பாளையம், அரசமர வீதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி யின் கட்டமைப்பு பழுதடைந்து உள்ளதால், இதனை அப்புற படுத்தி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு தேவையான பொறியாளர் அலு வலகம், சுகாதார அலுவலகம் மற்றும் மாமன்ற அலுவலகம் அமைத்து தர வேண் டும். சிறு, குறு தொழில்கள் அதிகம் நிறைந்து உள்ள இந்த பகுதியில், 30 ஆண்டுகள் பழை மையான வடிகால் என்பதால் மழைகாலங்க ளில் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடுகிறது. ஆகவே போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என மனு அளித்தனர். முன்னதாக மனுக்களை பெற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கோரிக்கைகள் சம்பந்தமாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார்.